சென்னை: தனது அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராயை இயக்குகிறார் மணிரத்னம் என்ற தகவலை மறுத்துள்ளார் சுஹாசினி.
பிரசவத்துக்குப் பிறகு உடலை கட்டுக்கோப்பாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், அடுத்து படம் நடிக்க தயாராகிறார்.
இந்த இரண்டாவது இன்னிங்கில் அவர் நடிக்கும் முதல் படத்தை மணி ரத்னம் இயக்குவார் என்றும், அது ஒரு ஆங்கில நாவலின் தழுவல் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயை மணிரத்னம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் மனைவி சுஹாசினி கூறியுள்ளார்.
இதுபற்றி சுஹாசினி கூறுகையில், "மணிரத்னம் தனது கடல் படத்தில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார். எந்தப் படத்தையும் அவசர கதியில் உருவாக்குவதில்லை மணிரத்னம். ஒரு படத்தின் கதையை உருவாக்க அவருக்கு எட்டு மாதங்களுக்கு மேல் தேவை. எனவே அடுத்த படம் குறித்து இப்போதே வந்துள்ள தகவல் சரியானது இல்லை," என்றார்.
Post a Comment