மும்பை: புத்தாண்டு நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை சமீரா ரெட்டிக்கு 50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சிலவாரங்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இதற்காக டிசம்பர் 31ம் தேதி மிகப்பெரிய ஹோட்டல்களிலும், மால்களிலும் கொண்டாட்டங்கள், பார்ட்டிகள் களைகட்டும். நடிகர், நடிகைகள் நடனம் அரங்கேறும். இதற்காக கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்க தயாராய் இருப்பார்கள் ஓட்டல் உரிமையாளர்கள்.
லக்னோ நகரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்று நடிகை சமீரா ரெட்டியை புத்தாண்டு பார்ட்டிக்கு புக் செய்திருக்கிறதாம். இதற்காக 10 நிமிடத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளம் அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
சிகிச்சைக்காகவும், தனது சகோதரியின் குழந்தையை பார்ப்பதற்காகவும் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சமீரா விரைவில் மும்பை திரும்பிய உடன் இந்த பார்ட்டிகளில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
Post a Comment