ஏ.ஆர்.ரஹ்மானின் 'தாய் மண்ணே வணக்கம்'… ஜெயா டிவியில் பொங்கல் ஸ்பெஷல்

|

Jaya Tv Pongal Special Program

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ‘தாய் மண்ணே வணக்கம்' லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி பொங்கல் விடுமுறை நாளில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமான மேடையில் முப்பதாயிரம் பார்வையாளர்கள், மூந்நூறுதொழில்நுட்பக் கலைஞர்கள், இசை நடனக் கலைஞர்கள் இவர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தாய் மண்ணே வணக்கம்' இசைவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினரோடு அமெரிக்காவை சேர்ந்த ஏழு பெண் இசைக் கலைஞர்கள் முதன்முறையாக டிரம்ஸ் வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பல பாடல்களை பாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிஹரன், சித்ரா, கார்த்தி ,பென்னி தயால், சின்மயி உள்ளிட்டோர் பாடல்களை பாடினார்கள். பாடல்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான பல நடனங்களும் நிகழ்த்தப்பட்டது. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஜெயா டிவியில் வருகிற பொங்கல் விடுமுறை தினங்களான ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் உலகத் தரதில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது கூடுதல் சிறப்பாகும்.

 

Post a Comment