டெல்லி சிறுமி கற்பழிப்பு- ஷில்பா ஷெட்டி கடும் கண்டனம்!

|

Time Wake Up Shilpa Shetty On Delhi Rape Case   

டெல்லி: ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நடிகை ஷில்பா ஷெட்டி, இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்றார்.

டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

கற்பழிப்பு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடக்கின்றன. நடிகர், நடிகைகளும் சிறுமி கற்பழிக்கப் பட்டதை கண்டித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இதுபற்றி கூறும்போது, "ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். இந்த கொடுமைகளுக்கு முடிவு எப்போது ஏற்படும் என்று தெரியவில்லை.

இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காலம் கடத்தாமல் உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்," என்றார்.

 

Post a Comment