நேற்று இரவு ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பொதுவாக சினிமா நிகழ்ச்சிகள், விருந்துகளில் ரஜினி பங்கேற்பதில்லை. அதுவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த பிறகு வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டார் ரஜினி.
ஆனால் தவிர்க்க முடியாத நண்பர்களின் அழைப்பை கவுரவிக்கும் வகையில் திடீரென வருகை தந்து அசத்துவது ரஜினி வழக்கம்.
நேற்று இரவு சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டல் பால்ரூமில் ஒரு பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் திரையுலக மறுபிரவேசத்தைக் கொண்டாடும் வகையிலும், பத்மஸ்ரீ விருது பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா.
ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
விருந்து நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் மின்னலாய் வந்தார் ரஜினி. விருந்துக்கு வந்திருந்த கேஎஸ் ரவிக்குமார், விவேக், பிரபு, ஜெயம் ரவி, பிசி ஸ்ரீராம், ராதிகா, லிஸி, பூர்ணிமா போன்றவர்களுக்கு ஹாய் சொன்னவர், ஸ்ரீதேவியிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
ரஜினியுடன் அதிகப் படங்களில் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இருவரும் 25 படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment