மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், அவரது மனைவி சூசனும் விவகாரத்து செய்யப் போவதாக தகவல் பரவி வருகிறது.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிகர் சஞ்சய் கானின் மகள் சூசன் கானை கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி மணந்தார். அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரித்திக்கின் நடவடிக்கைகள் சூசனுக்கு பிடிக்கவில்லையாம். இதையடுத்து அவர் அண்மையில் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தனது மாமனார் ராகேஷ் ரோஷனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கூட மூன்றாவது ஆள் போன்று வந்துவிட்டு சென்றர் சூசன். மேலும் வழக்கமாக தனது கணவருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் அவரை இந்த ஆண்டு பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ரித்திக்கும், சூசனும் விவாகரத்து பெறப் போவதாக தகவல் பரவி வருகிறது.
ரித்திக் நடித்துள்ள க்ரிஷ் 3 படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. படம் ரிலீஸுக்கு பிறகு அவர்கள் விவகாரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
Post a Comment