ஒரு நடிகையும் ரெண்டு ஹீரோவும்!

|

எதற்கும் இருக்கட்டுமே என்று ஒன்றுக்கு இரண்டாக பொருட்களை வைத்துக் கொள்ளலாம்... மனசுக்குப் பிடிச்ச மாதிரி ஆட்களை வைத்துக் கொள்ள முடியுமா... முடியும் என்கிறார் தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்னும் உச்சத்திலிருக்கும் அணில் கடிச்ச பழ நடிகை!

ஆம்... அம்மணி சென்னைக்கு வந்தால், பாண்டித்துரை படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு மயில் தோகையில் பெருக்கி விடுவாரே செந்தில்... அந்த ரேஞ்சுக்கு விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறாராம் அந்த வட்டிருப்பு மண்டை நடிகர்.

இதே 'பழம்' ஹைதராபாதுக்கோ, கேரளாவுக்கோ போனால், கூடவே கழுத்தில் உரசும் நெக்லஸ் மாதிரி க்ளோஸாக இருந்து கவனித்துக் கொள்கிறாராம் இன்னொரு டோலிவுட் நடிகர்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேனே மம்மி என்று அடிக்கடி போன் போட்டு அம்மாவிடம் சொல்லிவிடுகிறாராம்.

கோலிவுட்... டோலிவுட்டில் ஓகே... வெளிநாடு போகும்போது? அதை அந்தந்த பட ஹீரோ பார்த்துக் கொள்வாராம்!!

 

Post a Comment