விஷால் - லிங்குசாமி முதல் முதலாக இணைந்த சண்டக்கோழி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு இணையான வெற்றியை அதன் பிறகு இருவருமே கண்டதில்லை எனும் அளவுக்கு அந்தப் படம் அமைந்தது.
இப்போது மீண்டும் அதே கூட்டணி இணையவிருக்கிறது. இது சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக வரவிருக்கிறது.
அஞ்சானுக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் எண்ணி ஏழு நாள் படத்தை இயக்கப் போகிறார் லிங்குசாமி. இந்தப் படம் முடிந்த கையோடு விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி இரண்டாம் பாகம் எடுக்கிறார்.
அநேகமாக இந்தப் படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரியும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சும் தயாரிக்கக் கூடும் என்கிறார்கள்.
Post a Comment