விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படம் வரும் ஜனவரி 9-ம் தேதியன்று வெளியாகிறது. படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் படத்தை நேற்று சென்னை மண்டல தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த குழுவினர் படத்துக்கு யு ஏ சான்று அளித்துள்ளனர். படத்தில் வன்முறை மற்றும் கோரமான காட்சிகள் உள்ளதால் இப்படி சான்றளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசு விதிப்படி யுஏ சான்று பெற்ற படங்களுக்கு வரி விலக்கு தரப்பட மாட்டாது. எனவே, படத்தை ரிவைசிங் கமிட்டிக்குக் கொண்டு போய், யு சான்று பெற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
Post a Comment