விஜய்யின் 58வது படமான புலியின் சென்னை மற்றும் என்எஸ்ஸி விநியோக உரிமையை வாங்கியுள்ளது மறைந்த ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.
சிம்பு தேவன் இயக்கும் இந்தப் படத்தை ஷிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள். கதாநாயகிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். நடராஜ் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு 30 நாட்களாக நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் நடைபெற உள்ளது.
புலி படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி ஏரியாக்களின் உரிமைகளை மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. அரண்மனை, பிசாசு போன்ற படங்களின் விநியோக உரிமையும் இந்த நிறுவனத்துக்கத்தான் தரப்பட்டது நினைவிருக்கலாம்.
மற்ற பகுதிகளின் விநியோக உரிமையை பெரும் விலைக்குப் பேசி வருகின்றனர்.
Post a Comment