மீடியாக்காரர்களை ஹன்சிகா ஏன் தவிர்க்கிறார் தெரியுமா?

|

சென்னை: பிரஸ் மீட், ஆடியோ விழா, பிரஸ் ஷோ... என எதிலுமே தலை காட்டுவதில்லை ஹன்சிகா. ஷூட்டிங் ஸ்பாட்டில் மீடியாக்காரர்களைப் பார்த்தால் கூட கேரவனுக்குள்ளேயே பதுங்கிவிடுகிறார் ஹன்சி.

ஏன்?

எப்போது பார்த்தாலும் சிம்புவுடான காதல் முறிவு பற்றியே அதிகம் கேள்விகள் கேட்கிறார்களாம் செய்தியாளர்கள்.

வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்கையில் சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தார்கள். படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. தான் ஏன் ஹன்சிகாவை பிரிந்தேன் என சிம்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் இது குறித்து ஹன்சிகா எதுவும் கூறவில்லை.

மீடியாக்காரர்களை ஹன்சிகா ஏன் தவிர்க்கிறார் தெரியுமா?

இந்நிலையில் ஹன்சிகா பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது எல்லாம் அவரிடம் சிம்புவுடனான காதல் முறிவு பற்றிய கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்த ஹன்சிகாவுக்கு புது தலைவலி வேறு ஏற்பட்டுள்ளது.

ஹன்சிகாவின் குளியலறை காட்சி வீடியோ இணையதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். போலி வீடியோ பற்றி எதற்காக போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

காதல் முறிவு, குளியல் வீடியோ கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டி ஹன்சிகா பத்திரிக்கையாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வருகிறாராம்.

 

Post a Comment