ஹைதராபாத்: தெலுங்கு உலகின் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அடம் பிடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
மிக நீண்ட நாட்கள் கழித்து நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்க அவரது அன்பு மகன் ராம் சரண் தேஜா படத்தை தயாரிக்கிறார்.
சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவரது ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை அணுக 3 கோடி தந்தால் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதிர்ந்து போன படக்குழு தற்போது பயந்து பின்வாங்கி அந்த பணத்தில் இரண்டு பெரிய ஹீரோயின்களை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
எல்லாரும் உதயநிதி ஆகிட முடியுமா என்ன?
Post a Comment