சென்னை: தன் கணவரும் இயக்குனருமான விஜயின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை அமலா பால்.
நீண்ட வருடங்கள் கழித்து தமிழுக்குத் திரும்பும் இயக்குனர் பிரபுதேவா தமிழ் படங்களை இயக்கி தானே தயாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார். அதன் முதற்கட்டமாக ஒரு படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமான நடிகை அமலா பால் மைனா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டவர். தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்தபோது இயக்குனர் விஜயுடன் காதல் அரும்பி கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது.
திருமணத்திற்குப் பின் தாய்மொழியான மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் எடுக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அமலா பால் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூற அதற்கு விஜயும் ஒத்துக் கொள்ள, இப்போது கணவரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அமலா பால்.
டைரக்டர்ஸ கல்யாணம் பண்ணிக்கிற ஹீரோயின்களுக்கு திரும்ப நடிக்க வரதுல பிரச்சினை இல்ல போல...!
Post a Comment