சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை டாப்சி வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பாட்மிண்டன் வீரரை காதலிப்பதாக கூறப்படுகிறது
அவரின் பெயர் மத்தியாஸ்போ என்றும் அவர் எங்கு விளையாடினாலும் டாப்சி அங்கு சென்று தனது காதலை வளர்த்து வருகிறாராம்.
இவர் நடித்து வெளிவந்த காஞ்சனா 2 , வை ராஜா வை ஆகிய இரு படங்களும் வெளிவந்து வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்று இருக்கின்றன
ஆடுகளம் படத்தில் முதன்முதலில் அறிமுகமான இவருக்காகவே யாத்தே யாத்தே பாடலில் உன்ன வெள்ளாவி வச்சுத் தான் வெளுத்தாங்களா என்று பாடல் வரிகள் எழுதியது குறிப்பிடத்தக்கது
சமீபத்திய விழா ஒன்றில் இவர் பங்கேற்ற போது பத்திரிக்கையாளர்கள் இவரின் காதலைப் பற்றி கேட்டனர். காதலிக்கவில்லை என்று மறுக்கவும் இல்லை காதலிக்கிறேன் என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.
டென்மார்ர்க்கை சேர்ந்த பாட்மிண்டன் வீரரான இவரின் வயது 34. காதலைப் பற்றி எனது பெற்றோரிடம் கலந்து பேசுவேன் என்று கூறி இருக்கிறார்.
Post a Comment