மணிரத்னம் நலம்.. நாளை சென்னை திரும்புகிறார் - சுஹாசினி தகவல்

|

டெல்லி: பிரபல இயக்குநர் மணிரத்னம் நெஞ்சு வலி காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வரும் அவர் நாளை சென்னை திரும்புகிறார்.

இத்தகவலை அவர் மனைவி நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

59 வயதாகும் மணிரத்னத்துக்கு இன்று அதிகாலை லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Mani Ratnam is fine and return Chennai tomorrow

மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், மணிரத்னத்திற்கு ஏற்பட்டது லேசான நெஞ்சுலிதான் என்றும், சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்தன.

இப்போது ஓய்வெடுத்து வருகிறார் மணிரத்னம்.

மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் அவர் குரு, ராவணன், கடல் போன்ற படங்களைத் தந்தார்.

சமீபத்தில் ஓ காதல் கண்மணி படத்தை இயக்கி வெளியிட்டார். அடுத்து தனுஷை வைத்து இந்திப் படம் இயக்கவுள்ள நிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

 

Post a Comment