இயக்குநர் -நடிகர் பாக்யராஜ் மகனும், பிரபல நடிகருமான சாந்தனுவுக்கும், டிவி தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி திருமணம் நடக்கிறது.
இதுகுறித்து இன்று மீடியாவுக்கு தன் கைப்பட பாக்யராஜ் எழுதியுள்ள கடிதம்:
அன்பு பத்திரிகையாளர்கள நண்பர்களுக்கு, பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் பணிவான வணக்கம்.
ஒரு இனிய நற்செய்தி. எங்க 'வீட்ல விசேஷங்க'. ஆம்! எங்கள் புதல்வன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.
எங்கள் பெண் சரண்யா, சற்றுப் பொறுத்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டதால், வீட்டில் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்கவுள்ளது.
பெண்ணின் வீட்டாரும் நமது கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. பிரபல நடனக் கலைஞர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பதிகளின் கீர்த்தியே மணமகள்.
ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் திருமணமும், 22-ம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.
விரைவில் அழைப்பிதழுடன் முறைப்படி அனைவரையும் அழைக்க உள்ளோம்."
Post a Comment