சென்னை: விழித்திரு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் சத்தியன் மகாலிங்கம் இசையில் ஏழு இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தின் பாடல்களைப் பாடியுள்ளனராம்.
விழித்திரு படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது. அவள் பெயர் தமிழரசி படத்தைத் தொடர்ந்து நீண்ட வருடங்கள் கழித்து விழித்திரு படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்.
அதுமட்டுமின்றி தனது நண்பர்களுடன் இணைந்து படத்தையும் மெயின் ஸ்ட்ரீம் சினிமா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்.
கலைப்புலி தாணு, ரவிமரியா, பேரரசு,டி.ராஜேந்தர், ஆர்.வி.உதயகுமார், தம்பி ராமையா, விக்ரம் சுகுமாரன், கண்ணன், எஸ்.பி.ஜனநாதன், சீனு ராமசாமி, வெங்கட் பிரபு, லட்சுமணன் போன்ற இயக்குநர்கள் பாடல்களை வெளியிடும் நிகழ்விற்கு முன்பு மேடையில் விழித்திரு படத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை கூறினர்.
இவர்களைத் தவிர மேலும் பல இயக்குநர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
விதார்த் மற்றும் கிருஷ்ணா இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிகைகள் தன்ஷிகா, அபிநயா நடித்துள்ள இந்தப் படம் ஒரே இரவில் நடப்பது போன்ற கதையாம்.
Post a Comment