அமெரிக்கப் பெண் பாலியல் பலாத்காரம்: பீப்லி லைவ் படத்தின் இணை இயக்குநர் மஹ்மூத் கைது

|

டெல்லி: அமெரிக்கப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார், பீப்லி லைவ் இந்திப் படத்தின் இணை இயக்குநர் மஹ்மூத் பாரூக்கி. 2010 ம் ஆண்டில் இந்தி நடிகர் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த இந்திப் படம் பீப்லி லைவ்.

விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், இணை இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியவர் மஹ்மூத்.இவர் தான் தற்போது அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து 35 வயதான பெண் ஒருவர் தனது உயர்கல்வி சம்பந்தமான ஆராய்ச்சி விஷயமாக இந்தியா வந்திருக்கிறார்.

Peepli Live’ co-director, Mahmood Farooqui Arrested By The Delhi Police

டெல்லியில் ஆராய்ச்சியின் போது இயக்குநர் மஹ்மூத் உதவி செய்ய, பின்பு குடும்ப நண்பர்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். இது மஹ்மூத்தின் மனைவியும், திரைப்படத் தயாரிப்பாளருமான அனுஷ்கா ரிஸ்விக்கும் தெரியும்.

இந்நிலையில் டெல்லி காவல் நிலையத்தில் மஹ்மூத் கடந்த மார்ச் மாதம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, புகார் கொடுத்திருக்கிறார் அந்த அமெரிக்கப் பெண். இந்திய தண்டனைச் சட்டம் 164 ன் கீழ் வழக்கைப் பதிவு செய்தது டெல்லி காவல் துறை. புகாரின் பேரில் கடந்த வெள்ளிகிழமையன்று இந்திய தண்டனைச் சட்டம் 376ன் கீழ் மஹ்மூத் மீது எப்ஐஆர் பதிவு செய்த டெல்லி போலீசார் நேற்று அவரைக் கைது செய்திருக்கின்றனர்.

வழக்கை விசாரித்த டெல்லி நீதிபதிகள் மஹ்மூத்தை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் உச்சகட்ட காமெடி என்னவெனில் " என் கணவர் மிகவும் நல்லவர், அவரை மாதிரி நல்லவர் ஒருவரை இந்த உலகத்தில் பார்க்க முடியாது உண்மைக்கு புறம்பாக அவரைக் கைது செய்துள்ளனர் கடைசியில் நீதி வெல்லும்" போன்ற வசனங்களை பத்திரிக்கையாளர்களிடம் தொடர்ந்து ஒப்பித்துக் கொண்டிருக்கும் மஹ்மூத்தின் மனைவி அனுஷ்கா ரிஸ்வி தான்.

 

Post a Comment