ஹைதராபாத்: பாகுபலி படப்பிடிப்பின்போது நடிகை நோரா பதேஹியின் மேலாடை கழன்றுவிழ ஓடிப் போய் அவரது மானத்தை காப்பாற்றியுள்ளார் தமன்னா.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள மெகா பட்ஜெட் படம் பாகுபலி. அந்த படத்தில் மனோகரி என்ற குத்தாட்டப் பாடல் உள்ளது. அந்த பாட்டுக்கு மொராக்கோவைச் சேர்ந்த மாடலும், நடிகையுமான நோரா பதேஹி குத்தாட்டம் போட்டுள்ளார்.
படப்பிடிப்பில் அவர் கேமரா முன்பு குத்துப்பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கையில் அவரது மேலாடை கழன்றுவிழ அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்த தமன்னா ஓடிப் போய் அவரது மானத்தை காத்தார்.
இந்நிலையில் இது குறித்து நோரா கூறுகையில்,
அது மிகவும் பயங்கரமான தருணம். நல்ல வேளை தமன்னா வந்து என் மானத்தை காத்தார். அதற்காக நான் தமன்னாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.
Post a Comment