ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 18-ம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது. அதற்கு ஒரு நாள் முன்பாகவே மலேசியா புறப்படுகிறார்கள் ரஜினியும் படக்குழுவினரும்.
ரஞ்சித் இயக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் முதல் வாரமே தொடங்கிவிடும் என்று முதலில் கூறப்பட்டது.
மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தத் தேவையான இடங்களையெல்லாம் ஏற்கெனவே பார்த்து முடிவு செய்துவிட்டனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பை ஒரு மாதத்துக்கு தள்ளிப் போட்டுள்ளார் ரஜினி. இப்போது வெளிநாடு சென்றிருக்கும் இயக்குநர் ரஞ்சித், திரும்பி வந்ததும், படத்தின் நடிகர் நடிகைகளை இறுதி செய்யவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தேவும், முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், நாசர், கலையரசன், தினேஷ் போன்றவர்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 17-ம் தேதி மலேசியா புறப்படுகிறார் ரஜினி. அவருக்கு முன்பே படக்குழுவின் ஒரு பகுதி மலேசியா செல்கிறது. ரஜினியுடன் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவும் பயணிக்கிறது.
40 நாட்கள் அங்கு முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று தெரிகிறது.
Post a Comment