தெலுங்கில் 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆறு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் அனுஷ்கா. நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் மூன்றில் ஒருவராக நடிக்கிறார். இதற்கிடையே ரவிதேஜா ஜோடியாக 'வீரா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். கதை கேட்டு ஓகே சொல்லியிருந்த அனுஷ்கா, திடீரென ஷூட்டிங் போகும் நேரத்தில் படத்திலிருந்து விலகியுள்ளார்.
இது குறித்து அவரது தரப்பில் கூறும்போது, ''முன்பு சொன்ன கதையில் நிறைய மாற்றங்கள் செய்துவிட்டனர். அதன்படி இப்போது படத்தில் மூன்று ஹீரோயின்கள். டாப்ஸி, மஞ்சரி ஆகியோரும் நடிக்கின்றனர். இதனால் தனது கேரக்டருக்கு முக்க¤யத்துவம் குறைவதாக அனுஷ்கா உணர்ந்தார். இதையடுத்து படத்திலிருந்து அவர் விலகியுள்ளார்'' என்றனர். அனுஷ்கா விலகியதையடுத்து அந்த வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.
Source: Dinakaran
Post a Comment