தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்துக்கு சிக்கல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமாதானப்படுத்தும் முயற்சியில் இயக்குனர் இறங்கியுள்ளார். ஜே.எஸ். 24 பிரேம்ஸ் சார்பில் ஜெ.செந்தில்குமார் தயாரிக்கும் படம் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள&தமிழ்நாடு எல்லை பகுதியில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இப்போது வெட்டோத்தி சுந்தரத்தின் குடும்பத்தினர், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் படத் தரப்பு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:இந்த கதை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அறிந்த ஒன்று. நானும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கும் தெரியும். மதுரை, கோவை, நெல்லை மாவட்டத்தின் பதிவுகளாக பல படங்கள் வந்து விட்டது. அதுபோன்று குமரி மாவட்டத்தின் சமீபத்திய வரலாற்றையும், மக்களின் வாழ்க்கை முறையும் பதிவு செய்யும் முயற்சிதான் இது. சுந்தரத்தின் கதையோடு குமரி மாவட்டத்தின் பிரச்னைகளும் மண்ணின் மணமும் சேர்ந்தே வரும். அவர் நல்லவரா கெட்டவரா என்பதை ஆராயும் படம் அல்ல. அவரது வாழ்க்கையை சொல்லும்படம். அதில் நிஜ கேரக்டர்களை சொல்லாவிட்டால் டாக்குமென்டரி ஆகிவிடும். படத்தின் கேரக்டர்களில் பலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அஞ்சலி நடிக்கும் லூர்துமேரி கேரக்டர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் கேரக்டர். யாரையும் இந்தப் படம் புண்படுத்தாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து படத்தை போட்டுக் காட்ட இருக்கிறோம். தற்போது இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. அது முடிந்ததும் படத்தை போட்டுக் காட்டுவோம்.


Source: Dinakaran
 

Post a Comment