காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்

5/30/2011 10:45:56 AM

கபிஷேக் பிலிம்ஸ் சார்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படம், 'காட்டுப்புலி'. ஒளிப்பதிவு, ராஜேந்திர பிரசாத். இசை, விஜய் வர்மா. ஸ்டண்ட் மற்றும் இயக்கம், டினு வர்மா. படத்தின் ஹீரோ அர்ஜுன், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தி ஸ்டண்ட் மாஸ்டர் டினு வர்மா என் நண்பர். அவரது இயக்கத்தில், இந்தப் படம் உருவாகியுள்ளது. ரஜனீஷ்சாயாலி பகத், அமீத்ஹனாயா, ஜஹான்ஜெனிபர் ஜோடிகள் காட்டில் பயணிக்கின்றனர். திடீரென்று ஒரு நெருக்கடியில் சிக்குகின்றனர். காட்டிலிருக்கும் அவர்களை எப்படி காப்பாற்றுகிறேன் என்பது கிளைமாக்ஸ். தலக்கோணம் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. ராட்சத பல்லி, அட்டை, விஷப்பாம்பு போன்ற மிருகங்களுக்கு மத்தியில் காட்டில் தங்கி நடித்தது திகில் அனுபவம். எனது ஆக்ஷன் வேட்டைக்கு இந்தப்படம் அதிரடி தீனியாக அமைந்தது. அண்டர் வாட்டர் ஃபயர், குதிரை மற்றும் கார் துரத்தல் காட்சிகளில் சாகஸங்கள் செய்துள்ளேன். ஆக்ஷன் பிரியர்களுக்கு இது ரசனையாக இருக்கும்.  இவ்வாறு அர்ஜுன் கூறினார். பேட்டியின்போது கலைப்புலி எஸ்.தாணு, டினு வர்மா, தமிழ்ப் பகுதி இயக்குனர் ஜெயராம் உடனிருந்தனர்.

 

Post a Comment