ஐபிஎல் நிதி முறைகேடு : ஷாருக்கிடம் 6 மணி நேரம் விசாரணை!

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஐபிஎல் 20-20 தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளராக ஷாருக்கான் உள்ளார். 2வது சீசன் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடந்த போது நிதிமுறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கப்பிரிவினர் அப்போதைய பிசிசிஐ சேர்மன் ஷாஷங் மனோகர், ஐபிஎல் கமிட்டி தலைவர் லலித் மோடி, உறுப்பினர் ரவிசாஸ்திரி ஆகியோரிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அமலாக்கப்பிரிவினர் முன் ஷாருக்கான் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் ஐபிஎல் போட்டிகள் மூலம் கிடைத்த லாபம், நஷ்டம், விளம்பரம் மூலம் வந்த வருமானம் எவ்வளவு, வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டதற்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்வி களை அதிகாரிகள் கேட்டனர்.

சுமார் 6 மணி நேரம் இந்த விசா ரணை நடந்தது. தொடர்ந்து கணக்கு வழக்கு ஆவணங்களை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி ஷாருக் கான் கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.


 

Post a Comment