சென்னை: போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக சத்யராஜ் நடித்த படத்தைத் தயாரித்த வரதராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
52 வயதான வரதராஜன் சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்வர். நடிகர் சத்தியராஜை வைத்து சுயேச்சை எம்.எல்.ஏ என்ற படத்தை தயாரித்துள்ளார். மேலும் சில படங்களையும் தயாரித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இவர் ஆயில் நிறுவனமும் நடத்தி வந்தார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு தங்கசாலை தெருவில் உள்ள தேனா வங்கி கிளையில் ரூ.25 லட்சம் கடன் பெற்று இருந்தார். போலி ஆவணம் மூலம் இந்த கடன் தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக இவர்மீது புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிவர்மன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தயாரிப்பாளர் வரதராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
52 வயதான வரதராஜன் சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்வர். நடிகர் சத்தியராஜை வைத்து சுயேச்சை எம்.எல்.ஏ என்ற படத்தை தயாரித்துள்ளார். மேலும் சில படங்களையும் தயாரித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இவர் ஆயில் நிறுவனமும் நடத்தி வந்தார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு தங்கசாலை தெருவில் உள்ள தேனா வங்கி கிளையில் ரூ.25 லட்சம் கடன் பெற்று இருந்தார். போலி ஆவணம் மூலம் இந்த கடன் தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக இவர்மீது புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிவர்மன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தயாரிப்பாளர் வரதராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Post a Comment