விஷால் படத்தில் இருந்து வெளியேறினார் பிரகாஷ்ராஜ்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
த்ரிஷா நடிக்கும் படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் வெளியேறினார். விஷால், த்ரிஷா முதன்முறையாக ஜோடியாக நடிக்கும் படம் 'சமரன்'. இதை திரு இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை இயக்கியவர். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் அரவிந்த சாமியிடம் பேசப்பட்டது. இப்படம் மூலம் அவர் ரீ என்ட்ரி ஆவார் என்று திரையுலகினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீண்டும் நடிக்க வருவதற்கு மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த வேடத்துக்கு பிரகாஷ்ராஜ் பேசப்பட்டார். முதலில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஒரு மாதம் தள்ளிப்போனது. நடிகர்களின் கால்ஷீட் பிரச்னையும் ஏற்பட்டது. இப்போது படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் வெளியேறி இருக்கிறார். தற்போது இந்த வேடத்திற்கு மனோஜ் பாஜ்பாய் தேர்வாகி உள்ளார். இவர், இந்தியில் பிரபல நடிகர். தற்போது 'சமரன்' ஷூட்டிங் பாங்காக்கில் நடக்கிறது. விஷால், பாஜ்பாய், த்ரிஷா நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக உள்ளன.


 

Post a Comment