கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படம், 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'. இதில் அபிநயா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால், இப்போது ரிச்சா கங்கோபாத்யாய் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்காதது ஏன் என்று அபிநயாவிடம் கேட்டபோது, அவரது தந்தையும், நடிகருமான ஆனந்த் வர்மா கூறியதாவது: முதலில் கவுதம் கம்பெனியில் இருந்து பேசினார்கள். சில மாதங்களுக்கு முன் ஸ்கிரீன் டெஸ்ட் மற்றும் போட்டோசெஷனில் அபிநயா கலந்துகொண்டார். இப்போது வேறொரு ஹீரோயின் நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது. அபிநயா ஏன் தேர்வாகவில்லை என்ற காரணம் தெரியவில்லை. தமிழில் 'மேளதாளம்', மலையாளத்தில் 'ரிப்போர்ட்டர்', தெலுங்கில் 'சந்துருடு', வெங்கடேஷ் மற்றும் மகேஷ்பாபு தங்கையாக 'சீத்தம்மா வாகிட்லோ ஓ ஸ்ரீமல்லிசெட்டு' படங்களில் அபிநயா நடித்து வருகிறார்.
Post a Comment