சென்னை: டேம் 999 படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது குறித்து தமிழக ஆளுநரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய, டேம் 999 போன்ற படங்கள் உரிய தருணத்தில் தடைசெய்யப்பட்டதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தடுக்கப்பட்டுள்ளன.இது போன்ற படங்களை தயாரிக்கும் போது, மக்களின் உணர்வுகள் புண்படாத வகையில், தயாரிப்பாளர்கள் செயல்பட என சட்டசபையில் தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
இதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வரவேற்கின்றது என்று தெரிவித்துள்ளார் அவர்.
Post a Comment