'நீலாம்பரி'யாக ஆசைப்படும் 'முத்தழகி' பிரியாமணி

|

Priyamani Wants Become Neelambari   

சென்னை: பிரியாமணிக்கு ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாம்.

பருத்தி வீரன் படத்தில் முத்தழகியாக வந்து நடிப்பில் கலக்கிய பிரியாமணிக்கு ஏனோ தமிழில் தற்போது வாய்ப்பே இல்லை. இதனால் அவர் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் பேச்சை யாரும் சட்டை பண்ணியதாக தெரியவில்லை.

இந்நிலையில் அவர் தன்னுடைய ஆசை ஒன்றை தெரிவித்துள்ளார். படையப்பா படத்தில் நீலாம்பரியாக வந்து ரஜினியை படாதபாடு படுத்தியிருப்பார் ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணிக்கு ஆசையாக உள்ளதாம். அது சரி நீங்க நல்லாதான் நடிப்பீங்க. ஆனால் தமிழில் இன்னொரு நீலாம்பரியாக உங்களை ஆக்க யார் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் பெரிய்யயய கேள்விக்குறி.

 

Post a Comment