மும்பை: இந்த ஆண்டு காதலர் தினத்தை கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் கொண்டாடுகிறார் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் நவாப் குடும்பத்தைச் சேர்ந்த மன்சூர் அலி கான் பட்டோடியின் மகனும், நடிகருமான சைப் அலி கானை காதலித்து மணந்தார். திருமணத்திறக் பிறகும் அவருக்கு மவுசு குறைவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இம்ரான் கானுடன் நடிக்கும் படத்திற்காக அவர் மீண்டும் சைஸ் ஜீரோவுக்கு மாறப்போகிறார். அதாவது ஒல்லிக்குச்சியாகப் போகிறார்.
இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து கரீனா கூறுகையில்,
திருமணத்திற்கு பிறகு நவாப் குடும்ப பேகமாக என்னை மாற்றிக் கொண்டுள்ளேன். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று நான் சைபுடன் இருக்க மாட்டேன். அன்று போபாலில் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருப்பேன். இந்த காதலர் தினத்தை அமித்ஜி, அஜய் தேவ்கன் மற்றும் பிரகாஷ் ஜா ஆகியோருடன் கொண்டாடுகிறேன். இந்த ஆண்டு சைப் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். அவருக்கு நான் கடந்த அக்டோபர் மாதம் சிறந்த பரிசை அளித்தேன் என்று நினைக்கிறேன் என்றார்.
Post a Comment