தென்னிந்தியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடியும் சூர்யாவின் சிங்கம் 2!

|

Singam 2 Starts From South India Ends In South Africa   

சென்னை: சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் கதை தென்னிந்தியாவில் தொடங்கி, தென்னாப்ரிக்காவில் முடிவது போல அமைக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிக்க, ஹரி இயக்கும் சிங்கம் 2 படம் பரபரப்பாக வளர்ந்து வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட இந்தப் படம் குறித்து, இயக்குநர் ஹரி கூறுகையில், "சிங்கம் 2 வேகமாக இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஒரு படத்தின் இரண்டாம் பாகம், அதன் முதல் பாக கதையை ஒட்டியே உருவாவது இதுதான் முதல் முறை.

முதல் பாகத்தில் பிரகாஷ்ராஜ் இறந்துவிடுவார். அதனால் இந்த இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை. இதில் சந்தானம் இணைந்திருக்கிறார்.

உண்மையில் முதல் பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கான அவுட்லைன் என்னிடம் இருந்தது. படத்தின் க்ளைமாக்ஸில் வேட்டை தொடரும் என போட்டதால் பலரும் இரண்டமா பாகம் எப்போது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதன் விளைவு இரண்டாம் பாகத்தை எடுத்தேன்.

முதல் பாகத்திற்கு சற்றும் குறையாமல் அதே விறுவிறுப்போடு இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளேன். இதன் கதை இந்தியாவில் ஆரம்பித்து தென்னாப்பிரிக்காவில் முடிகிறது. தூத்துக்குடிதான் கதைக்களம் என்றாலும், க்ளைமாக்ஸ் வெளிநாட்டில்தான்," என்றார்.

 

Post a Comment