சென்னை: நயன்தாரா இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பின்போது குட்டிப் பாம்புடன் தைரியமாக விளையாடியுள்ளார்.
நயன்தாரா உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடந்து வருகிறது. கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயப்படும் பல பெண்கள் இருக்கையில் நயன்தாராவோ படப்பிடிப்பின்போது ஒரு குட்டி பாம்பை தைரியமாக கையில் எடுத்து விளையாடியுள்ளார்.
மேலும் அந்த பாம்புக்கு பாபு என்று பெயர் வைத்துள்ளார். நயன்தாரா தைரியமாக விளையாடுவதைப் பார்த்த படக்குழுவினரும் அந்த பாம்போடு விளையாடியுள்ளனர்.
ஒரு பாம்பு கிடைத்தால் அதை இந்த பாடா படுத்துவது?
Post a Comment