இனி வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதில்லை என புதிய முடிவு எடுத்துள்ளாராம் நயன்தாரா.
சமீபத்தில் அப்படி வந்த சில பெரிய பட வாய்ப்புகளையும் உதறியுள்ளார்.
சமீபத்தில் நாகார்ஜுனாவுடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்த ஒரு படம் தோல்வியைத் தழுவியது.
தமிழில் அஜீத், ஆர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் அவரை, தெலுங்கில் பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, வெங்கடேஷ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக கேட்கிறார்களாம்.
இன்னொரு பக்கம் இளம் ஹீரோக்கள் ராம் சரண், நானி, சித்தார்த் போன்ற நடிகர்களுடன் இளம் ஹீரோயின்கள் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.
எனவே இனி இளம் ஹீரோக்களுக்கு மட்டுமே ஜோடியாக நடிப்பது என்ற புதிய முடிவை எடுத்துள்ளாராம் நயன்.
ஆனால் இந்த முடிவு தெலுங்குக்கு மட்டும்தானாம். தமிழில் அஜீத், விஜய் என 'வயதான' ஹீரோக்களுடன் நடிக்கவே முன்னுரிமை தருகிறாராம்.
நயன்தாரா அறிமுகமானவே 50 வயதைத் தாண்டிய பிறகு சரத்குமார் நடித்த ஐயா படத்தில் அவருக்கு ஜோடியாகத்தான். அதன் பிறகு சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
Post a Comment