சென்னை: தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களுடன் அனுப்புமாறு சந்துருவின் தாயார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சந்துரு தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிமன்றம்.
நீதிபதிகளிடம் தான் தன் தந்தை சேரனுடன் போகவே விரும்புவதாகவும், காதலன் வேண்டாம் என்றும் தாமினி தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு தரப்பு, தாமினியை மனம் மாற்றிவிட்டார்கள் சினிமாக்காரர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான மனுவை பிற்பகலில் சமர்ப்பித்தது.
ஆனால் சேரன் மகள் பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையிலும் தந்தையுடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார். இதனை வாக்குமூலமாகவும் அளித்தார்.
எனவே சந்துரு தாயாரின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
Post a Comment