சென்னை: தனக்கு படங்களில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் போடா போடி படம் மூலம் நடிகையானவர் நடிகரும், சமக தலைவருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. புதிதாக நடிக்க வருபவர்கள் எல்லாம் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வரலட்சுமியை ஆளையே காணவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்கிறார். பாலா சசிகுமாரை வைத்து எடுக்கும் படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கிறார். ஒரு படத்திற்கும், மற்றொன்றும் இவ்வளவு பெரிய இடைவெளியா விடுவது என்று வரலட்சுமியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில்,
படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. எனக்கு பிடித்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன். இந்த காலத்திற்குள் இத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்வது இல்லை என்றார்.
Post a Comment