80-களின் நாயக - நாயகியர் சந்திப்பு.. முதல்முறையாக கமல் பங்கேற்கிறார்!

|

கடந்த சில ஆண்டுகளாக எண்பதுகளில் பிரபலமாகத் திகழ்ந்த நாயக - நாயகியர் சந்தித்து விருந்துண்ணும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

நடிகை லிஸிதான் இந்த நிகழ்ச்சியை முதலில் ஆரம்பித்து வைத்தார். அதில் ரஜினிகாந்த் உள்பட பலரும் பங்கேற்றனர்.

ஆண்டு தோறும் நடக்கும் நிகழ்வாகிவிட்ட 'எண்பதுகளின் நாயக நாயகியர் சந்திப்பு' நிகழ்ச்சி, இந்த ஆண்டும் நடக்கவிருக்கிறது.

80-களின் நாயக - நாயகியர் சந்திப்பு.. முதல்முறையாக கமல் பங்கேற்கிறார்!

இந்த முறை ரஜினியுடன் கமலும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

இந்த நிகழ்வுக்கு வரும் நடிக நடிகையர் குறிப்பிட்ட சீருடையில்தான் வரவேண்டும். சந்திப்பு தேதி விரைவில் தெரிவிக்கப்படும்.

இந்த சந்திப்பு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இந்த முறை சீனியர்களுடன், இன்றைய இளம் ஹீரோக்களும் ஹீரோயின்களும் கலந்து கொள்கிறார்கள்.

மோகன், சுதாகர், மம்முட்டி, கார்த்திக், சுரேஷ், விஜய்பாபு, விஜயகுமார், அம்பரீஷ், கன்னட ரவிச்சந்திரன், கதாநாயகிகள் பூர்ணிமா, அம்பிகா, ஸ்ரீப்ரியா, ரேவதி, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், ராதிகா, லிசி, சசிகலா, நதியா, மாதவி, ஊர்வசி, சுமலதா, சுவப்னா, சரிதா, மதுபாலா உள்ளிட்ட பலர் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Post a Comment