இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

|

இசை உலகின் உயரிய கிராமி விருதினை இந்தியாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ், நீல வாஸ்வாணி ஆகியோர் வென்றுள்ளார்.

57வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

இதில் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 'வைன்ட்ஸ் ஆப் சம்சாரா' ஆல்பத்திற்காக ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ரிக்கி கெஜ், பெங்களுருவைச் சேர்ந்தவர். இவர் தென்னாப்பிரிக்காவின் இசைக் கலைஞர் வவுட்டர் கெல்லர்மேனுடன் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கியிருந்தார்.

ஐ அம் மலாலா என்ற குழந்தைகள் ஆல்பத்திற்காக நீல வாஸ்வானி கிராமி விருது வென்றுள்ளார். ஒரு பெண் குழந்தை எப்படி கல்விக்காக குரல் கொடுத்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதைச் சொல்லும் ஆல்பம் இது. இதனை குரல் பதிவாகவும் தந்துள்ளார் வாஸ்வாணி.

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

பண்டிட் ரவிஷங்கரின் மகள் அனோஷ்காவின் ட்ரேசஸ் ஆப் யு ஆல்பம், பெஸ்ட் வேல்ட் மியூசிக் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது பெறத் தவறிவிட்டது.

Read in Hindi: Grammy Awards 2015 Best Moments In Pics
 

Post a Comment