தாத்தா, அப்பா, பேரன்... மூன்றுமே சூர்யா.. 3 வித்தியாசமான வேடங்களில்!

|

சென்னை: மாசு படத்துக்குப் பிறகு, விக்ரம் குமாரின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் '24' படத்தில் தாத்தா, அப்பா மற்றும் பேரன் என மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

யாவரும் நலம் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்க விருந்தார் இயக்குநர் விக்ரம் குமார், இடையில் சில காரணங்களால் படம் தள்ளிப் போய்விட்டது. உடனே தெலுங்கில் மனம் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் பெரிய வெற்றிப் படமானது.

Suriya As Son, Father And Grandfather In 24?

அதே படத்தை இப்போது சூர்யாவை வைத்து ரீமேக் செய்து வருகிறார். சூர்யா இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் தோன்றுகிறார். மூன்று வேடங்களிலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு சூர்யா கடுமையாக உழைத்து வருகிறார்.

பேரன் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். மற்ற இரண்டு வேடங்களுக்கும் ஜோடி இருக்கிறார்களா, என்பது குறித்து ரகசியம் காக்கிறார் இயக்குநர்.

யாவரும் நலம் படத்தைப் பார்த்தவர்களை மிரட்டிய விக்ரம் குமார், இந்தப் புதிய படத்தை குடும்பக் காவியமாகக் காட்டப் போகிறார்.

 

Post a Comment