கொம்பனைத் தொடர்ந்து விஷாலை இயக்கும் முத்தையா

|

சென்னை: சசிக்குமாரை வைத்து குட்டிப்புலியை இயக்கிய முத்தையா, முதல் படத்தில் சறுக்கினாலும் சில வருடங்கள் கழித்து தனது அடுத்த படத்தில் நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

கொம்பன் படத்தை இயக்கியதன் மூலம் முதல் படத்தில் இழந்த வெற்றியையும் சேர்த்து இந்தப் படத்தில் மீட்டெடுத்தார்.

Komban Fame Muthaiah’s Next  Joined With Vishal

கிராமத்துப் பின்னணியில் கதைக்களம் அமைத்து ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் முத்தையா தனது அடுத்தப் படத்தில் நடிகர் விஷாலை இயக்க விருக்கிறார். கொம்பனின் வெற்றியால் கவரப்பட்ட நடிகர் விஷால், முத்தையாவிடம் கதை கேட்டிருக்கிறார். முத்தையா சொன்ன ஒருவரிக் கதை விஷாலைக் கவர உடனடியாக கதையை தயார் செய்யுங்கள் நான் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டார்.

தற்போது முழுக் கதையையும் இயக்குனர் முத்தையா எழுதி விட்டார். பாயும் புலி படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் பரபரப்பாக இருக்கும் விஷால், பாயும் புலி முடிந்தவுடன் இயக்குனர் லிங்குசாமி மற்றும் பாண்டிராஜ் ஆகியோரின் படங்களை முடித்துவிட்டு இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கதை கிராமத்துக் கதையா இல்லை நகரம் சார்ந்த கதையா என்பது தெரியவில்லை.

 

Post a Comment