சென்னை: 3 மற்றும் வேலையில்லாப் பட்டதாரி படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் - தனுஷுடன் இணைந்திருக்கும் மூன்றாவது படம் மாரி.
மாரி படத்தில் தனுஷ் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகின.
தரலோக்கல்... பாடல் அநேகன் படத்தின் டங்காமாரி மற்றும் அஜித்தின் அதாரு உதாரு பாடல் இரண்டையும் கலந்தது போன்று இருக்கிறது. நல்ல உற்சாகமெட்டில் பெயருக்கு ஏற்றார் போன்று தர லோக்கலாகவே அமைந்து ரசிகர்களை சந்தோசப் படுத்தியிருக்கிறது இந்தப் பாடல்.
தற்போது பட்டி தொட்டியெங்கும் மாரி படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. மேலும் ஒரு சிறப்பு அம்சமாக தரலோக்கல் பாடலில் நடிகர் தனுஷுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார் கொலைவெறி அனிருத்.
படத்தை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களும் நிச்சயம் ஆட்டம் போட்டு ரசிக்கும் விதமாக அனைத்துப் பாடல்களும் அமைந்து விட்டதால், தனுஷின் ரசிகர்களும் தற்போது படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
படத்திற்குப் படம் தனுஷின் புகழ் தங்கம் விலை போலவே உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது!
Post a Comment