பிரைட் ஆப் தமிழ் சினிமா என்ற சினிமா புத்தகத்துக்காக தேசிய விருது பெற்ற தனஞ்செயனுக்கு ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.
நேற்று ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் நேரில் சந்தித்த தனஞ்செயன், தான் எழுதிய ‘பிரைட் ஆப் தமிழ் சினிமா' புத்தகத்தை அவரிடம் கொடுத்தார். புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட ரஜினி, அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
உடன் தனது திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரையும் அழைத்து வந்து ரஜினியுடன் படமெடுக்க வைத்துள்ளார்.
தான் எழுதிய புத்தகத்துக்கு ரஜினியிடமிருந்து பாராட்டு கிடைத்தது தனஞ்செயனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை சமூக வலைத் தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.
Post a Comment