5/4/2011 10:20:19 AM
நடிகை காவ்யா மாதவன், கேரள சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்தார். அவர் அரசியல் கட்சி ஒன்றில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனக்கு எப்போதுமே அரசியலில் ஈடுபாடு கிடையாது. இந்த முறை பத்தினாபுரம் தொகுதியில் மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) துணை தலைவர் கணேஷ்குமார் போட்டியிட்டா£ர். எங்கள் சங்கத்தை சேர்ந்தவர் என்பதால் பிரசாரம் செய்தேன். அவருக்கு எதிரணியில் இருப்பவர்கள் அதற்குள் பல கதைகள் கட்டிவிட்டார்கள். மற்றபடி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை.
சினிமாவில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்து திலீப்புடன் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறேன். தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு கதை சொல்கிறார்கள். தமிழில் நடிக்க ஆசையும் இருக்கிறது. ஆனால் நல்ல கம்பெனி முக்கியம் என்பதால் அதற்காக காத்திருக்கிறேன்.
Post a Comment