இடைவெளி ஏன்?

|

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இடைவெளி ஏன்?

5/4/2011 10:16:07 AM

போட்டிகளை சமாளிக்க கவனமாக அடியெடுத்து வைக்கிறேன் என்று கரண் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' எனது அடுத்த படமாக வெளிவருகிறது. நான் ரொம்பவே எதிர்பார்க்கும் படம். முதன் முதலாக ஒரு நிஜ கேரக்டரில் நடித்திருக்கிறேன். கன்னியாகுமரி வழக்கு, பாடி லேங்குவேஜ் என்று நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். எனது படங்கள் வெளிவருவதில் நிறைய இடைவெளி இருப்பது உண்மைதான். நான் ஒவ்வோரு கேரக்டரையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அதற்காக உழைக்கிறேன். காரணம் புதிய களம், புதிய சிந்தனையுடன் நிறைய இளம் இயக்குனர்கள், நடிகர்கள் வருகிறார்கள். போட்டி அதிகமாக இருக்கிறது. இதில் ஜெயிக்க வேண்டுமானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாதாரணமான கேரக்டர்களில் நடித்தால் சீக்கிரமே காணாமல் போய்விடுவேன். அதனால் எனக்கேற்ற கேரக்டர்களை தேர்வு செய்து அதில் அதிக அக்கறை எடுத்து நடிப்பதால், இடைவெளி தவிர்க்க முடியாததாக இருக்கிறது.




 

Post a Comment