மும்பை: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 5-வது சீசனில் மரியா சூசைராஜை எடுக்கும் எண்ணமே இல்லை என்று அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனல் தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் ஷோவின் 4 சீசன்களையும் ஒளிபரப்பிய கலர்ஸ் தொலைக்காட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
நீரஜ் குரோவர் கொலை வழக்கில் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த கன்னட நடிகை மரியா சூசைராஜை பிக் பாஸ் 5-வது சீசனில் எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. அதில் உண்மை இல்லை. இதற்காக நாங்கள் மரியாவை அணுகவும் இல்லை, அணுகவும் மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது படத்தில் மரியாவை கதாநாயகியாக நடிக்க வைக்க ஆர்வம் காட்டியுள்ளார். இது குறித்து கேட்க மரியாவையோ அல்லது அவரது வழக்கறிஞர் ஷரிப் ஷேக்கையோ அணுக முடியவில்லை.
கடந்த சனிக்கிழமை தனக்கும், இந்த கொலைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மரியா தெரிவித்திருந்தார்.
இந்த கொலை குறித்து மரியா கூறியதாவது,
நான் குற்றமற்றவள் என்று எனக்குத் தெரியும், எனது கடவுளுக்கும் தெரியும். ஒரு குடும்ப உறுப்பினரை இழந்து தவிப்பது என்னால் உணர முடிகிறது. இது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது. நான் நீரஜ் குடும்பத்தார் பற்றியோ அல்லது நீரஜ் பற்றியோ எதுவும் தெரிவிக்க வரும்பவில்லை என்றார்.
டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீரஜ் குரோவரை கொலை செய்ததற்காக மரியா சூசைராஜுக்கு 3 ஆண்டுகள் மற்றும் அவரது காதலர் முன்னாள் கடற்படை அதிகாரி எமிலி ஜெரோமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிக் பாஸ் ஷோவின் 4 சீசன்களையும் ஒளிபரப்பிய கலர்ஸ் தொலைக்காட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
நீரஜ் குரோவர் கொலை வழக்கில் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த கன்னட நடிகை மரியா சூசைராஜை பிக் பாஸ் 5-வது சீசனில் எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. அதில் உண்மை இல்லை. இதற்காக நாங்கள் மரியாவை அணுகவும் இல்லை, அணுகவும் மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது படத்தில் மரியாவை கதாநாயகியாக நடிக்க வைக்க ஆர்வம் காட்டியுள்ளார். இது குறித்து கேட்க மரியாவையோ அல்லது அவரது வழக்கறிஞர் ஷரிப் ஷேக்கையோ அணுக முடியவில்லை.
கடந்த சனிக்கிழமை தனக்கும், இந்த கொலைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மரியா தெரிவித்திருந்தார்.
இந்த கொலை குறித்து மரியா கூறியதாவது,
நான் குற்றமற்றவள் என்று எனக்குத் தெரியும், எனது கடவுளுக்கும் தெரியும். ஒரு குடும்ப உறுப்பினரை இழந்து தவிப்பது என்னால் உணர முடிகிறது. இது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது. நான் நீரஜ் குடும்பத்தார் பற்றியோ அல்லது நீரஜ் பற்றியோ எதுவும் தெரிவிக்க வரும்பவில்லை என்றார்.
டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீரஜ் குரோவரை கொலை செய்ததற்காக மரியா சூசைராஜுக்கு 3 ஆண்டுகள் மற்றும் அவரது காதலர் முன்னாள் கடற்படை அதிகாரி எமிலி ஜெரோமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Post a Comment