தனது விஷயத்தில் அம்மா ராதா தலையிடுவதில்லை என்று நடிகை கார்த்திகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவுடன் வந்து ஷூட்டிங்கில் தலையிடுவதாக பேச்சு அடிபட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அவர் தனது மகளை கவர்ச்சியாக நடிக்க வைக்கக் கூடாது என்று இயக்குனர்களுக்கு கன்டஷன் போடுவதாகவும் பேசப்பட்டது. இதை தாயும், மகளும் மறுத்துள்ளனர்.
இது குறித்து கார்த்திகா கூறுகையில்,
என் தனிபட்ட விஷயங்களிலும் சரி, நடிப்பிலும் சரி என் அம்மா ராதா தலையிடுவது இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் நான் இயக்குனரின் குழந்தை. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் நடிப்பேன். என் அம்மா 150 படங்களில் நடித்துள்ளார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார். உச்சத்தில் இருக்கையிலேயே குடும்பம் தான் முக்கியம் என்று செட்டிலாகிவிட்டார். சினிமாத்துறையில் அவருக்கு இன்றும் மதிப்பும், மரியாதையும் உள்ளது என்றார்.
ராதா கூறுகையில்,
சினிமா முன்பு போன்று இல்லை. எவ்வளவோ மாறிவிட்டது. தற்போதுள்ள இளம் நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு குறித்த அனைத்து விஷயங்களும் நன்றாகத் தெரிகிறது. தங்கள் சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள். என் மகளும் சாதிப்பார் என்றார்.
முன்னாள் நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவுடன் வந்து ஷூட்டிங்கில் தலையிடுவதாக பேச்சு அடிபட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அவர் தனது மகளை கவர்ச்சியாக நடிக்க வைக்கக் கூடாது என்று இயக்குனர்களுக்கு கன்டஷன் போடுவதாகவும் பேசப்பட்டது. இதை தாயும், மகளும் மறுத்துள்ளனர்.
இது குறித்து கார்த்திகா கூறுகையில்,
என் தனிபட்ட விஷயங்களிலும் சரி, நடிப்பிலும் சரி என் அம்மா ராதா தலையிடுவது இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் நான் இயக்குனரின் குழந்தை. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் நடிப்பேன். என் அம்மா 150 படங்களில் நடித்துள்ளார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார். உச்சத்தில் இருக்கையிலேயே குடும்பம் தான் முக்கியம் என்று செட்டிலாகிவிட்டார். சினிமாத்துறையில் அவருக்கு இன்றும் மதிப்பும், மரியாதையும் உள்ளது என்றார்.
ராதா கூறுகையில்,
சினிமா முன்பு போன்று இல்லை. எவ்வளவோ மாறிவிட்டது. தற்போதுள்ள இளம் நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு குறித்த அனைத்து விஷயங்களும் நன்றாகத் தெரிகிறது. தங்கள் சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள். என் மகளும் சாதிப்பார் என்றார்.
Post a Comment