மன்சூரலிகான், ஷில்பா, பிரவீன், அஞ்சனா நடிக்கும் படம், 'லொள்ளு தாதா பராக் பராக்'. வியாசன் இயக்குகிறார். படம் பற்றி நிருபர்களிடம் மன்சூரலிகான் கூறியதாவது: வங்கிகள் ஆதாரம் இல்லாமல் யாருக்கும் கடன் கொடுப்பது இல்லை. படத்தில் லொள்ளு தாதாவாக வரும் நான், எந்த ஆதாரமும் கேட்காமல், வியாபாரம் செய்ய கடன் கொடுக்கிறேன். என்னிடம் கடன் வாங்கியவர்கள் ஒழுங்காக கட்டினார்களா, இல்லையா என்பதை காமெடியாகச் சொல்கிறேன். 'வட்டி வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதையும் வலியுறுத்துகிறேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Post a Comment