சென்னை: அரசியலில் குதிக்குமாறு என்னை சின்ன வயசிலேயே பல அரசியல் கட்சிகள் கூப்பிட்டனர். ஆனால் அவ்வளவு உயரத்திலிருந்து குதிக்க முடியாது என மறுத்துவிட்டேன், என்றார் கமல்ஹாஸன்.
விஸ்வரூபம் படம் தமிழகத்தில் நேற்று வெளியானது. நேற்று மாலையே நிருபர்களை அழைத்த கமல், படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதா என் படத்தை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது அவர் முதல்வராக இருக்கிறார். ஆனால், அவர் மூத்த கலைஞர். படம் பார்ப்பதில்லை என்ற அவருடைய உறுதியை கைவிட்டு, என் படத்தைப் பார்ப்பார் என்று நம்புகிறேன்.
எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும்தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள்.
இந்தப் பிரச்சினைகளுக்குப் பிறகு நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்கிறார்கள். அதை 35 வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அரசியல் வேண்டாம். தெரியாத விஷயத்தில் இறங்க மாட்டேன்.
நான் சின்ன வயசிலிருக்கும்போதே, அரசியலில் குதியுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். அவ்வளவு உயரத்திலிருந்து குதித்தார் அடிபடும் வேண்டாம் என்று நான்தான் கூறிவிட்டேன்!," என்றார்.
Post a Comment