காதலனைக் காணக் கடல் கடந்த ‘கடவுள்’ நடிகை

|

கடவுள் படத்தில் கண் பார்வையற்றவராக கஷ்டப்பட்டு நடித்தும், கை கொடுக்கவில்லை தமிழ் சினிமா. சொந்த மொழியில் நடிக்கிறேன் என கடக் கடந்து சென்றவர், அங்கு ஒரு காதலை வாங்கி வந்தாராம்.

பட வாய்ப்புகள் இல்லாமல் தனியார் கம்பெனியில் பணிக்கு சேர்ந்த பின்னரும் காதலன் நினைவால் வாடினாராம் நடிகை. இதனால், நடிப்பும் வேண்டாம், வேலையும் வேண்டாம் என எல்லாவர்றிற்கும் சேர்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு, மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தனது தாயகத்திற்கே பறந்து விட்டதாம் இந்த ஜேஜே என்றிருக்கும் கிளி.

சீக்கிரமே டும் டும் செய்தி அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்து நண்பர்கள்.

 

Post a Comment