'யாரும் நம்மால பாதிக்கக் கூடாது...!' - கோச்சடையானை தள்ளி வெளியிடச் சொன்ன ரஜினி!

பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தால் கோச்சடையானுக்கு 750 அரங்குகள் நிச்சயம் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உறுதியாகக் கூறியும், அதே தேதியில் வெளியாகும் விஜய், அஜீத் படங்கள் பாதிக்க வேண்டாம் என்று கூறி கோச்சடையானை தள்ளி வெளியிட அறிவுறுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதனை படத்தின் தயாரிப்பாளரும் உறுதி செய்துள்ளார்.

'யாரும் நம்மால பாதிக்கக் கூடாது...!' - கோச்சடையானை தள்ளி வெளியிடச் சொன்ன ரஜினி!

கோச்சடையான் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் 750 தியேட்டர்களைத் தர திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அதே தேதியில் விஜய் நடித்த ஜில்லாவும் அஜீத் நடித்த வீரமும் வெளியாவதாக அறிவித்தனர். இதனால் விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில், வீரம் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதை நாங்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டோம், ஆனால் தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளதாக ரஜினியிடம் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது வீட்டில் வைத்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் முரளி மனோகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய ரஜினி, நம்மால் எந்த வகையிலும் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறியதோடு, 'நம்ம படம் சோலோவாவே வரட்டும். அதுக்கேத்த மாதிரி ஒரு தேதியை டிசைட் பண்ணுங்க," என்றாராம்.

 

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்!

சென்னை: பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர் இன்று அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

இந்திய சினிமாவில் பல நூறு படங்களில் 50 ஆண்டு காலம் நடன இயக்குநராக பணியாற்றியவர் ரகுராம்.

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்!

இன்று பிற்பகல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரகுராமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்தது.

ரகுராமின் மகள்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உடல் காம்தார் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரகுராமின் மகள்கள் வெளிநாடு சென்றிருப்பதால், அவர்கள் திரும்பிய பிறகே இறுதி சடங்குகள் நடத்தப்படும்.

நாளை பிற்பகலுக்குப் பிறகு அவர் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூதுவராக செயல்படவில்லை - நயன்தாரா, த்ரிஷா மறுப்பு

சென்னை: நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சிசிஎல்லின் சென்னை ரைனோஸ் அணிக்கு விளம்பரத் தூதராக செயல்படவில்லை என்று நடிகைகள் நயன்தாராவும் த்ரிஷாவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் ‘சிசிஎல்' நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூதுவராக செயல்படவில்லை - நயன்தாரா, த்ரிஷா மறுப்பு

இதில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனேஸ் அணிக்கு நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோர் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

திரிஷா ஏற்கனவே இந்த அணியில் தூதுவராக இருந்துள்ளார். நயன்தாராவை தூதுவராக நியமித்து பிறகு நீக்கி விட்டனர்.

இப்போது மீண்டும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர்களிடம் கேட்டபோது மறுப்பு தெரிவித்தனர்.

நயன்தாரா கூறுகையில், "சிசிஎல் கிரிக்கெட் அணிக்கு தூதுவராக இருக்கும்படி கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதற்கு என்னிடம் நேரமும் இல்லை. தற்போது எனது முழு கவனமும் நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில்தான்," என்றார்.

த்ரிஷா கூறும்போது," ஏற்கெனவே நான் தூதுவராக இருந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை யாரும் என்னை அழைக்கவில்லை," என்றார்.

 

ஒரு வாரம் தள்ளிப் போனது கோச்சடையான் இசை வெளியீடு... கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!

சென்னை; சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது.

ஒரு வாரம் தள்ளிப் போனது கோச்சடையான் இசை வெளியீடு... கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!

முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் இறுதி பிரிண்ட் தயார் செய்யும் பணிக்காக சவுந்தர்யா வெளிநாடு சென்றிருப்பதால், மேலும் இரண்டு வாரங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது இசை வெளியீடு.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான் பாடல்கள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. இதில் தமிழ் மற்றும் இந்தியில் ரஜினியே தன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போதுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும்.

இதற்காக நேரு உள்விளையாட்டரங்கை முன்பதிவு செய்ததோடு, ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், திரைத் துறையினர், பொதுப் பிரிவினர் என அனைத்துத் தரப்பினருக்கும் அனுமதிச் சீட்டுகள் தயாராகி வருகின்றன.

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!'

படம் மற்றும் அதன் நாயக - நாயகிகளுக்காக சில பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகளை அடிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று.

நடிகை படப்பிடிப்பின்போது கடலில் விழுந்தார், குளத்தில் விழுந்தார், மாடு முட்டியது, கல் தடுக்கி விழுந்ததில் ரத்தம் கொட்டியது என்றெல்லாம் அவர்களின் பிஆர்ஓக்கள் பரபரப்பு தகவல் பரப்புவார்கள்.

வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!'

சரி, தெரிஞ்ச விஷயம்தானே என அவற்றையெல்லாம் செய்தியாக்கி இலவச பப்ளிசிட்டியும் தருவார்கள் மீடியாக்காரர்கள்.

கொடுக்கிறது டுபாக்கூர் தகவலாக இருந்தாலும், அதையும் சரியாக செய்ய வேண்டாமா... நம்ம நடிகை வேதிகாவுக்கு பப்ளிசிட்டி தருவதாகக் கூறிக்கொண்டு, சமீபத்தில் அவரது ஆட்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்கள்...

"சில தினங்களுக்கு முன் சிங்காரவேலன் என்ற மலையாளப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது வேதிகா தவறி குளத்தில் விழுந்துவிட்டார். இருந்தாலும் தைரியமாக சமாளித்து கரையேறி, ஷூட்டிங்கைத் தொடர்ந்தார். அவர் தைரியத்தை அனைவரும் பாராட்டினார்கள்' என்று செய்தி பரப்பிவிட்டனர்.

ஆனால் சிங்காரவேலன் என்ற படம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதியே வெளியாகிவிட்டது.

வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!'

அதைவிடக் கொடுமை, அதன் க்ளைமாக்ஸ் காட்சி கடந்த மே மாத இறுதியில் படமாக்கப்பட்டதாம்.

வேதிகா இப்போது நடித்துக் கொண்டிருப்பது வசந்த பாலனின் காவியத் தலைவன் படத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை அம்பலமானதும், மலையாள பத்திரிகைகள் ரவுண்டு கட்டி கிண்டலடித்து வருகின்றன வேதிகாவை!

 

சிம்பு - நயன் பற்றிய கேள்விகளால் வெறுப்பு - ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஹன்சிகா!!

சென்னை: தொடர்ந்து சிம்பு - நயன்தாரா ஜோடி சேர்வதைப் பற்றியே பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்ததால் கடுப்பான ஹன்சிகா, தனது ட்விட்டர் கணக்கு மூடிவிட்டார்.

நடிகர், நடிகைகள் பலரும் இப்போது தங்கள் கருத்துகள், பட விவரங்களை ரசிகர்களுக்கு நேரடியாக சமூக வலைத் தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு - நயன் பற்றிய கேள்விகளால் வெறுப்பு - ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஹன்சிகா!!

ஹன்சிகாவும் ட்விட்டரில் இருந்தார். சிம்புவுடனான காதலை டுவிட்டர் மூலம்தான் அவர் வெளிப்படுத்தினார். தனது படங்கள், படப்பிடிப்பு விவரங்களையும் வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சிம்பு எப்போது மீண்டும் நயன்தாராவுடன் கைகோர்தாதாரோ, அன்றிலிருந்து இந்த ட்விட்டர் ஹன்சிகாவுக்கு தொல்லையாக மாறிவிட்டது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல், நண்பர்களும்கூட சிம்பு - நயன்தாரா மீண்டும் சேர்ந்து நடிப்பது பற்றி ஹன்சிகாவிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்ததில் வெறுத்துப் போய்விட்டாராம் ஹன்சி.

சிம்புவை இன்னும் காதலிக்கிறீர்களா? நயன்தாராவுடன் உங்கள் காதலன் ஜோடி சேர்வதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? சிம்பு இப்போது உங்களுடன் பேசுகிறாரா? நாங்க அப்பவே உங்களை எச்சரித்தோமே... கேட்டீர்களா? போன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம்.

இதனால் கடுப்பான ஹன்சிகா, தனது ட்விட்டர் கணக்கையே க்ளோஸ் பண்ணிவிட்டார். தற்காலிகமாக விலகுவதாகவும், பிறகு பார்க்கலாம் என்றும் ட்வீட் செய்துவிட்டு வெளியேறியுள்ளார் ஹன்சிகா!

 

சித்திரம் டிவியில் கோலுவுடன் விளையாடுங்க!

கலைஞர் குழுமங்களில் ஒன்றான சித்திரம் டி.வி.யில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுமையான நிகழ்ச்சி "கோலுவுடன் விளையாடுங்க..."

இதுவரை தொலைக்காட்சிக்கு வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த நாம் அதனோடு களமிறங்கி விளையாடப் போகிறோம்.

சித்திரம் டிவியில் கோலுவுடன் விளையாடுங்க!

கோலு என்னும் அனிமேஷன் கதாபாத்திரம் டி.வி.யில் விளையாடும் வீடியோ கேம்களில், நாம் வீட்டில் இருந்தபடியே பங்கேற்க முடியும். கோலுவோடு இணைந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து விட்டால் விளையாட்டுக்குள் நுழைந்து விடலாம்.

நம்முடைய மொபைல் போனிலோ அல்லது லேண்ட்லைனிலோ இருக் கும் எண்களை வைத்து விளையாட்டை நகர்த்தலாம். இதில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு நிகழ்ச்சி, சிறந்த பொழுதுபோக்காகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஹைதராபாத்தில் விஜய் - காஜல் அகர்வால் நடனம்!

ஜில்லா படத்துக்காக விஜய் - காஜல் அகர்வால் நடனமாடிய பாடல் காட்சி சமீபத்தில் ஹைதராபாதில் படமாக்கப்பட்டது.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி வழங்கும் படம் "ஜில்லா". இந்தப் படத்தின் டாக்கி பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள அண்ணபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கில் இந்தப் பாடலை படமாக்கினார்கள்.

ஹைதராபாத்தில் விஜய் -  காஜல் அகர்வால் நடனம்!  

விஜய் - காஜல் அகர்வால் இருவரும் சேர்ந்து ஆடிய இந்த பாடல்காட்சியில் சார்லட், ஹேஜல் என்ற இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் ஆடிப் பாடினர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்தார்.

முக்கிய வேடத்தில் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ், மகத், தம்பி ராமய்யா, சூரி, சம்பத், ரவிமரியா, ஆர்.கே.சரண், நிவேதா, பிரதீப் ராவத், ஜோமல்லூரி, ப்ளாக் பாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

வைரமுத்து, விவேகா, யுகபாரசி, பார்வதியின் பாடல்களுக்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஆர் டி நேசன்.

 

ரதி, ரம்யா நடிக்கும் சித்திரம் பேசுதடி: 5 சகோதரிகளின் கதை

ஜெயா டிவியில் சித்திரம் பேசுதடி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இது தாயில்லாத, தந்தையின் வளர்ப்பில் வளரும் 5 சகோதரிகளின் கதை.

கோலங்கள், மாதவி, பொக்கிஷம் தொடர்கள் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு அறிமுகமான இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் குடும்பத்தொடர் ‘சித்திரம் பேசுதடி'.

ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடர், பெண்களையும் குடும்ப உறவுகளையும் மையப்படுத்தி வந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மத்தியில், இன்னொரு கோணத்தில் ரசிகர்களை ஈர்க்கும்விதத்தில் உருவாகி வருகிறது.

ரதி, ரம்யா நடிக்கும் சித்திரம் பேசுதடி: 5 சகோதரிகளின் கதை

பெண்களின் கதை

ஆணாதிக்கமும் பொருளாதாரமும் அடக்கி ஒடுக்கும் பெண்ணின் மனச்சித்திரம் பேசத் தொடங்கினால் அதில் எத்தனையோ கண்ணீர் சுவடுகள் இருக்கலாம். எண்ண முடியாத சிரிப்பலைகள் பரவலாம்.

பெண்களின் சுதந்திரம்

‘‘சித்திரம் பேசுதடி'' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில், திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் தனிப்பட்ட சுதந்திரம், ரசனை, லட்சியம் என இருக்க, திருமணத்திற்கு பிறகு அவள் அவளாக இருக்கிறாளா? இருக்க முடிந்ததா? என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான கதைக்களமே இந்தத் தொடர் என்கிறார் இயக்குநர் திருச்செல்வம்.

5 சகோதரிகள்

குந்தவை, தமயந்தி, தேன்மொழி, மணிமேகலை, கயல்விழி இவர்கள் ஐவரும் தாயை இழந்த ஐந்து சகோதரிகள். இவர்களின் தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்வாணன்.

பெண்களின் கனவுகள்

திருமணத்திற்கு முன்பாக இந்த பெண்களிடம் இருக்கும் கனவுகள், தேடல்கள் எல்லாமே திருமணத்திற்கு பின்பாகவும் உயிர்ப்போடு இருக்கிறதா, அதை அடைகிறார்களா அல்லது மறைந்து போகிறதா? இன்றைய இளம்பெண்களின் வாழ்க்கை தட பதிவுகளை மிக யதார்த்தமாக பேச வருகிறது, இந்த தொடர்.

தேன்மொழியாக ரதி

‘சொல்ல மறந்த கதை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரதி கதையின் நாயகி தேன்மொழி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ரம்யா, பூஜா, ஸ்ரீதேவி ஆகியோர் சகோதரிகளாக நடிக்கின்றனர்.

இயக்குநர் திருச்செல்வம்

இவருடன் சத்யப்பிரியா, விஜயகிருஷ்ணராஜ், பாரதி, மோகன் வைத்யா, ஷ்ரவன், ரம்யா, பூஜா, பிரகாஷ்ராஜன், ஸ்ரீதேவி, பவ்யகலா, ஹர்ஷிதா, சங்கரன்கோவில் கணேசன், ருத்ராஸ்ரீ, மாஸ்டர் ரோகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜெயா டி.விக்காக திருச்செல்வம் தியேட்டர்ஸ் நிறுவனம் ‘‘சித்திரம் பேசுதடி'' தொடரை தயாரித்து வழங்குகிறார்கள். இந்த தொடருக்கு நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.

 

ஜெயா டிவியில் ஆல்பம் 2: மீண்டும் வரும் பெப்சி உமா

ஜெயா டிவியில் ஆல்பம் 2 நிகழ்ச்சியை பெப்சி உமா மீண்டும் தொகுத்து வழங்குகிறார்.

சன் டிவியில் பெப்ஸி நிறுவனம் ஸ்பான்சர் செய்த உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் நடத்தி சாதனை புரிந்தவர். இதனால் அவரது பெயர் பெப்ஸி உமா என்றே மாறிப்போனது.

கட் அவுட் வைக்கும் அளவிற்கு பிரபலமான உமா, கலைஞர் டிவி தொடங்கப்பட்ட உடன் அங்கே மாறினார். பின்னர் அங்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களினால் மீடியா உலகை விட்டே விலகினார்.

ஜெயா டிவியில்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜெயாடிவியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களை பேட்டி கண்டார். சிவகுமார், பிரபு என திரை உலக பிரபலங்களும், அரசியல் கட்சியினரையும், காவல்துறை அதிகாரிகளையும் பேட்டி கண்டார்.

போலீஸ் புகார்

ஜெயா டிவியில் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்பட்ட உமா, தன்னை அவமானப்படுத்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் கொடுத்து விட்டு மீண்டும் சின்னத்திரையிலிருந்து விலகிக் கொண்டார்.

உமா சமாதானம்

உமா புகார் கொடுத்த தயாரிப்பாளர் மீது சேனல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து சமாதானமாகிவிட்ட உமா மீண்டும் உற்சாகத்தோடு வருகிறார்.

ஆல்பம் 2

இப்போது மீண்டும் தனது சின்னத்திரை பயணத்தை தொடரவிருக்கிறார். "ஆல்பம் நிகழ்ச்சியோட ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. அடுத்த பகுதி புதுப்பொலிவுடன் தயாராகிக்கிட்டிருக்கு. வித்தியாசமான கோணத்தில் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். மீண்டும் ஆல்பம் 2 வில் ரசிகர்களை சந்திப்பேன்" என்கிறார் உமா.

 

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம்.

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

 

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

நல்ல பார்மில் உள்ள ஒரு கலைஞனை காலி பண்ண வேண்டும் என்றால், அளவுக்கு மீறிப் புகழவேண்டும் என்பது சினிமாவில் ஒரு விதி!

இப்போது அப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருப்பவர் விஜய் சேதுபதி. தானுண்டு தன் நடிப்புண்டு என்று உள்ள இந்த மனிதர், அழைக்கிற நிகழ்ச்சிகளுக்கு நோ சொல்லாமல் போய்விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அட அவ்வளவு ஏன்.. ஒரு முறை தான் நடித்த படம் ஒன்றைப் பற்றிய அறிவிப்பைக் கண்டதும், அவர்கள் அழைக்காமலேயே இவர் போய் நின்றதும் உண்டு!

அப்படிப்பட்டவரின் தலையில் இப்போது பெரிய பெரிய ஐஸ் மலைகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள், சினிமாவில் ரிட்டயரானவர்கள் மற்றும் கிட்டத்தட்ட ரிட்டயர்மென்ட் ஸ்டேஜில் இருப்பவர்கள்.

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

சில தினங்களுக்கு முன்பு சத்யம் சினிமாஸில் நடந்த ஒரு விழாவில், வரிசையாக மைக் பிடித்த அத்தனைபேரும் விஜய் சேதுபதி பற்றியே பேசிவிட்டு, விழா பற்றி பேசமறந்துவிட்டுப் போனார்கள்.

நேற்று நடந்த ஒருவிழாவில் இயக்குநர் கேயார் பேசியது, விஜய் சேதுபதியை மலை உச்சிக்கு லிப்டில் வைத்து தூக்கிக் கொண்டு போனதைப் போன்ற உணர்வைத் தந்தது (எப்போ உருட்டிவிடப் போகிறார்களோ!)...

கேயார் தன் பேச்சில், "எந்த தயாரிப்பாளரும் நஷ்டத்தையோ மன வருத்தத்தையோ கொள்ளும்படியான விஷயங்களில் நான் ஈடு பட மாட்டேன் என்று விஜய்சேதுபதி அளித்திருந்த பேட்டி பற்றி பலர் பேசினார்கள்.

ஏம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்று ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுப் பிறகு விஜய் சேதுபதிதான் அது மாதிரி செயல்படுகிறார். மற்றவர்களும் இது மாதிரி செயல்பட்டால் நல்லது," என்றார்.

 

சிவாஜி சிலை: எல்லார் கண்ணிலும் படும்படி வேற இடத்துல வச்சிடலாம்! - ராதாரவி

சென்னை: சிவாஜி சிலை விவகாரத்தில் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டோம். இனி நீதிமன்றம்தான் பதில் சொல்லணும்.. வேண்டுமென்றால் இப்போது உள்ளது போல அனைவருக்கும் தெரியும் வகையில் புதிய இடம் தேர்வு செய்து அந்த சிலையை வைக்கலாம் என நடிகர் சங்க செயலாளர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற வேண்டுமென்று அ.தி.மு.க. அரசின் காவல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, திரை உலகைச் சேர்ந்தவர்களோ, நடிகர் சங்கத்தினரோ இதுவரை எதிர்ப்பே தெரிவிக்கவில்லையே என்று திமுக தலைவர் கலைஞர் வியாழக்கிழமை தனது கேள்வி பதில் அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிவாஜி சிலை: எல்லார் கண்ணிலும் படும்படி வேற இடத்துல வச்சிடலாம்! - ராதாரவி

இதேபோல், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தினர் மவுனமாக இருப்பது சிவாஜி பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையை போக்க காங்கிரஸ் தொண்டர்களையும், சிவாஜி ரசிகர்களையும், சிவாஜி மன்றத்தினரையும் ஒன்று திரட்டி மிக விரைவில் நடிகர் சங்கத்தின் கண்டுகொள்ளாத போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து வாய் திறந்துள்ளார் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி.

அவர் கூறியுள்ளதாவது:

சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற வேண்டாம் என்று நாங்களும் கமிஷனர் அலுவலத்தில் மனு கொடுத்திருக்கிறோம். அப்போது இதுகுறித்து அவர்கள் தெளிவாகக் கேட்டுக் கொண்டனர்.

தமிழத் திரை உலகத்தின் முக்கியமான, தவிர்க்க முடியாத நடிகர் சிவாஜி கணேசன். இப்போது அவரது சிலை அமைந்திருக்கும் இருக்கும் இடமே முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

அப்படி அந்த சிலையை அகற்றியே ஆக வேண்டும் என்றால் தற்போதைய இடத்தைப்போல எல்லோர் கண்ணிலும் படும் வகையிலான நல்ல ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே இந்த சிலையை வைக்க வேண்டும்.

போக்குவரத்து காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து நீதிமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும்," என்றார்.

 

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

சென்னை: விஷாலின் அடுத்த படமான நான் சிகப்பு மனிதனின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'  

இந்த தருணத்தில் அவர் நான் சிகப்பு மனிதன் என்னும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படத்தை விஷாலை வைத்து சமர் படம் இயக்கிய திரு எடுக்கிறார். பாண்டியநாடு படத்தை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லக்ஷ்மி மேனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1985ல் வெளியான சூப்பர் ஹிட் படம் நான் சிகப்பு மனிதன். தற்போது அதே தலைப்பை விஷாலின் படத்திற்கு வைத்துள்ளனர். இந்த சிகப்பு மனிதன் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம்.

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

 

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

நல்ல பார்மில் உள்ள ஒரு கலைஞனை காலி பண்ண வேண்டும் என்றால், அளவுக்கு மீறிப் புகழவேண்டும் என்பது சினிமாவில் ஒரு விதி!

இப்போது அப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருப்பவர் விஜய் சேதுபதி. தானுண்டு தன் நடிப்புண்டு என்று உள்ள இந்த மனிதர், அழைக்கிற நிகழ்ச்சிகளுக்கு நோ சொல்லாமல் போய்விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அட அவ்வளவு ஏன்.. ஒரு முறை தான் நடித்த படம் ஒன்றைப் பற்றிய அறிவிப்பைக் கண்டதும், அவர்கள் அழைக்காமலேயே இவர் போய் நின்றதும் உண்டு!

அப்படிப்பட்டவரின் தலையில் இப்போது பெரிய பெரிய ஐஸ் மலைகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள், சினிமாவில் ரிட்டயரானவர்கள் மற்றும் கிட்டத்தட்ட ரிட்டயர்மென்ட் ஸ்டேஜில் இருப்பவர்கள்.

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

சில தினங்களுக்கு முன்பு சத்யம் சினிமாஸில் நடந்த ஒரு விழாவில், வரிசையாக மைக் பிடித்த அத்தனைபேரும் விஜய் சேதுபதி பற்றியே பேசிவிட்டு, விழா பற்றி பேசமறந்துவிட்டுப் போனார்கள்.

நேற்று நடந்த ஒருவிழாவில் இயக்குநர் கேயார் பேசியது, விஜய் சேதுபதியை மலை உச்சிக்கு லிப்டில் வைத்து தூக்கிக் கொண்டு போனதைப் போன்ற உணர்வைத் தந்தது (எப்போ உருட்டிவிடப் போகிறார்களோ!)...

கேயார் தன் பேச்சில், "எந்த தயாரிப்பாளரும் நஷ்டத்தையோ மன வருத்தத்தையோ கொள்ளும்படியான விஷயங்களில் நான் ஈடு பட மாட்டேன் என்று விஜய்சேதுபதி அளித்திருந்த பேட்டி பற்றி பலர் பேசினார்கள்.

ஏம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்று ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுப் பிறகு விஜய் சேதுபதிதான் அது மாதிரி செயல்படுகிறார். மற்றவர்களும் இது மாதிரி செயல்பட்டால் நல்லது," என்றார்.

 

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

சென்னை: விஷாலின் அடுத்த படமான நான் சிகப்பு மனிதனின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'  

இந்த தருணத்தில் அவர் நான் சிகப்பு மனிதன் என்னும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படத்தை விஷாலை வைத்து சமர் படம் இயக்கிய திரு எடுக்கிறார். பாண்டியநாடு படத்தை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லக்ஷ்மி மேனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1985ல் வெளியான சூப்பர் ஹிட் படம் நான் சிகப்பு மனிதன். தற்போது அதே தலைப்பை விஷாலின் படத்திற்கு வைத்துள்ளனர். இந்த சிகப்பு மனிதன் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

துப்பாக்கி 2 - விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கிய ஏ ஆர் முருகதாஸ்!

கதாநாயகன் விஜய்யை விட, அவரை இயக்கும் முருகதாஸ் அதிக சம்பளம் கேட்டுப் பெற்றுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

துப்பாக்கி படத்தில் விஜய்யை முதல் முதலாக இயக்கினார் ஏஆர் முருகதாஸ். அந்தப் படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் ரூ 8 கோடி ப்ளஸ் இந்தி ரைட்ஸ். இப்போது அதே படத்தை இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் உருவாக்கி வரும் முருகதாஸ், அடுத்து இயக்கும் தமிழ் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகம்.

துப்பாக்கி 2 - விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கிய ஏ ஆர் முருகதாஸ்!

படத்துக்கு தலைப்பு கூட துப்பாக்கி 2 என்றே வைத்திருக்கிறார்.

வெளியில் ஆயிரம் கருத்து சொன்னாலும், காசுன்னு வந்துட்டா கறாக இருக்கும் முருகதாஸ், இந்தப் படத்தின் ஹீரோ விஜய்யைவிட இரண்டு கோடி அதிகமாக சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம் முருகதாஸ். அதாவது ரூ 20 கோடி!

தலைவாவில் குனிந்த தலையும் முதுகும் நிமிரும்வரை இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமல் போவதுதான் நல்லது என அமைதியாகிவிட்டாராம் விஜய்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

 

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம்.

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

 

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

சென்னை: விஷாலின் அடுத்த படமான நான் சிகப்பு மனிதனின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'  

இந்த தருணத்தில் அவர் நான் சிகப்பு மனிதன் என்னும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படத்தை விஷாலை வைத்து சமர் படம் இயக்கிய திரு எடுக்கிறார். பாண்டியநாடு படத்தை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லக்ஷ்மி மேனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1985ல் வெளியான சூப்பர் ஹிட் படம் நான் சிகப்பு மனிதன். தற்போது அதே தலைப்பை விஷாலின் படத்திற்கு வைத்துள்ளனர். இந்த சிகப்பு மனிதன் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

தலைவா... வெற்றிகரமான நூறாவது நாள் போஸ்டர் அடிக்காம விட மாட்டாங்களாமே!

தமிழ் சினிமாவில் ஒரு வியாதி.... படம் அட்டர் ப்ளாப் என்று அப்பட்டமாகத் தெரிந்த பிறகும், இதை பெருமை பீத்தலுக்காக 100 நாள் வரை ஓட்டுவது.

இந்த ட்ரெண்டை தமிழில் ஆரம்பித்தது யாராக இருந்தாலும், அதிகமாகப் பயன்படுத்திய சாட்சாத் நம்ம விஜய்தான் (பேன்ஸ்ன்ற பேர்ல குதிக்காம, நிதானமா யோசிங்கப்பா!).

முதன் முதலில் விஜய் நடித்த நாளைய தீர்ப்பில் ஆரம்பித்தது இந்த நூறு நாள் ஓட்டும் அழுகுணி ஆட்டம்.

தலைவா... வெற்றிகரமான நூறாவது நாள் போஸ்டர் அடிக்காம விட மாட்டாங்களாமே!  

அப்போதெல்லாம் இதற்கென்றே நகரில் சில அரங்குகள் இருந்தன. மோட்சம், கிருஷ்ணவேணி, கமலா, இப்போது கோபிகிருஷ்ணா, ராதா... சில நேரங்களில் தேவி பாலா அல்லது கலா இவற்றில் ஏதாவது ஒரு உப்புமா படம் 100 நாள் காலைக் காட்சியாக ஓடி, அந்த ஆண்டின் நூறு நாள் பட லிஸ்டில் இடம் பிடித்துவிடும்.

விஜய் நடித்த விஷ்ணு, தேவா, செந்தூரபாண்டி, மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், ஒன்ஸ்மோர், நிலாவே வா, என்றென்றும் காதல் போன்ற படங்களின் நூறு நாள் ஓட்டம், மேற்கூறிய திரையரங்குகள் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கும்.

விஜய் பெரிய நடிகராகி, சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுக்க ஆரம்பித்த பிறகும்கூட இந்த பழக்கத்தை அவரால் அல்லது அவர் தந்தையால் விடவே முடியவில்லை. சச்சின் என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம். அந்தப் படத்தை வீம்புக்காக கமலா தியேட்டரில் மட்டும் நூறு நாட்கள் ஓட்டினார்கள். நூறாவது நாளன்று அந்தத் தியேட்டரில் பதினாறு பேர்தான் இருந்தார்கள்.

நூறாவது நாளிலேயே இந்த நிலை என்றால், அடுத்த நூறு நாட்கள் எப்படி இருந்திருக்கும்! காலக் கொடுமை... அப்படியும் இன்னும் நூறு நாட்கள் ஓட்டி, அதை இருநூறு நாட்கள் ஓடிய படமாகக் காட்டினார்கள்.

இதோ இப்போது தலைவா படம்...

இந்தப் படம் எப்படி வெளியானது என சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். வெளி மாநிலங்களிலெல்லாம் ரிலீசாகி, படம் தேறாது என எல்லோரும் ஒருமனதாக பிறகுதான் தமிழகத்தில் வெளியிட முடிந்தது.

வெளியான முதல் வாரமே பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள். ஆனால் அசராமல் தரணியெங்கும் அதிரடி வெற்றி என்ற அறிவிப்போடு 10வது நாள் போஸ்டர் அடித்தார்கள். சென்னையில் நான்கைந்து அரங்குகளில் கூட ஓடாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்கள் பெயரைப் போட்டு மகத்தான 25வது நாள் என அடுத்த விளம்பரத்தையும் வெளியிட்டார்கள்.

சரி இத்தோடு விட்டுவிடுவார்கள் என்று பார்த்தால், பேபி ஆல்பட் தியேட்டர் பெயரைப் போட்டு வெற்றிகரமான 50 வது நாள் என போஸ்டர்- பேப்பர் விளம்பரங்கள்!

இந்த நிலையில்தான் படத்தை நூறு நாட்கள் ஓட்டாமல் விடப்போவதில்லை என்பதில் தீவிரமாக உள்ளார்களாம். அதாவது ஜனங்க பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பணம் கொடுத்தாவது படத்தை நூறு நாட்கள் வரை ஓட்டுவது!

விஜய் படங்கள் என்றல்ல... மக்களிடம் தோற்றுப் போன பெரிய நட்சத்திரங்களின் குப்பைப் படங்களை வெட்டியாக ஓட்டும் அத்தனைப் பேருக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.

எதுக்கு இதெல்லாம்.... பேசாம தியேட்டர் பெயரே போடாமல் (ரிலீசாகி) வெற்றிகரமான 100வது நாள்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கிங்கப்பா!

 

சுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா!

சுந்தர் சி இயக்கும் கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தில் அஞ்சலிக்கு பதில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் சிவா, அஞ்சலி, விமல் ஓவியா நடித்த படம் கலகலப்பு. கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வசூலைக் குவித்தது.

சுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா!

அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் சுந்தர் சி. இப்போது இயக்கி வரும் அரண்மனை படம் முடிந்ததும் இந்த கலகலப்பு 2-வை இயக்குகிறார்.

முதல் பாகத்தில் நடித்த அதே சிவா, விமல், ஓவியா உள்ளிட்டோர்தான் இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். ஏற்கெனவே சிவா, விமல், ஓவியா ஆகியோரின் கால்ஷிட்டை சுந்தர் சி பெற்றுவிட்டாராம்.

ஆனால் அஞ்சலி வருவதுதான் சந்தேகமாக உள்ளதாம். இத்தனைக்கும் தமிழகத்திலிருந்தபடி இப்போது அஞ்சலிக்காக சில பஞ்சாயத்துகளை முன்னின்று பேசுபவர் சுந்தர் சிதானாம். இருந்தும் அஞ்சலியின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்பதால், வேறு ஹீரோயினைப் பார்க்கத் தொடங்கியுள்ளார்.

அப்போதுதான் ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது. அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யாவையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம் சுந்தர் சி.

 

வாடி வாசலில் ஆர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஸ்ருதிஹாஸன். இந்தப் படத்துக்கு வாடி வாசல் என தலைப்பிட்டுள்ளனர்.

'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவரும் ஆர்யாவும் இணைவதாக முதலில் செய்தி வெளியானபோது அதை மறுத்த மகிழ் திருமேனி, பின்னர் ஆர்யாவுடன் படம் செய்வது உண்மைதான் என அறிக்கை வெளியிட்டார்.

வாடி வாசலில் ஆர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன்!

ஹீரோயினாக முன்னணி நடிகையுடன் பேசி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இப்போது அந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஹீரோயின் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் முதல்முறையாக ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் இணைகிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார்.

'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகும் வாடிவாசல் மதுரையை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இருக்கும் என்கிறார்கள்.

‘நான் அவன் இல்லை', ‘அஞ்சாதே', ‘மாப்பிள்ளை', ‘போடா போடி' ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.

 

ஸ்ருதி ஹாஸனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை: ஸ்ருதியை சந்திக்கத் தடை

ஸ்ருதி ஹாஸனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை: ஸ்ருதியை சந்திக்கத் தடை

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்பாட் பாய் அசோக் த்ரிமுகே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 19ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ஸ்ருதி ஹாஸனின் வீடு புகுந்து அவரை ஒருவர் தாக்கியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அசோக் த்ரிமுகே என்ற ஸ்பாட் பாயை கைது செய்தனர்.

விசாரணையில் அசோக் கூறுகையில்,

நான் என் தம்பிக்கு ஸ்பாட் பாய் வேலை கேட்டுத் தான் ஸ்ருதி வீட்டுக்கு சென்றேன். அவரை பயமுறுத்த செல்லவில்லை. அவர் தான் என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்தினார் என்றார்.

இந்நிலையில் அசோக் ஜாமீன் கேட்டு பந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் வெளியே வந்த பிறகு ஸ்ருதியை சந்திக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

த்ரிஷாவின் திடீர் கழுதைப் பாசம்!!

நாய்கள், பூனைகள் என கைவிடப்பட்ட வீட்டு விலங்குகளைத் தேடிப் பிடித்து கரிசனமும் இரக்கமும் காட்டி வந்த நடிகை த்ரிஷாவின் திடீர் கழுதைப் பாசம்!!  

இதனால் கேட்பாரற்று தெருக்களிலும் சாலைகளிலும் திரியும் பல தெருநாய்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பூனைகளையும் ஆபத்திலிருந்து காக்க வலியுறுத்தி வருகிறார்.

நாய், பூனை மீது பாசம் காட்டிய திரிஷா தற்போது கழுதைகள் மீது பாசம் காட்ட தொடங்கியிருக்கிறார்.

நாய்களுக்கென்று நாய்கள் தினம் கொண்டாடும் திரிஷா, கழுதைகள் தினம் என்ற தலைப்பில் கழுதைகளுக்கு ரொட்டித் துண்டு போன்ற உணவுகளைத் தருவதுபோன்ற படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். அவருடன் வேறு சி்ல நடிகைகளும் கைகோர்த்துள்ளனர்.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீடாவின் விளம்பரத் தூதராக இருந்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. கையில் போதிய படங்கள் இல்லாத நிலையில், கிடைக்கிற பொழுதை இப்படி விலங்குகள் நலம் பேணுவதில் கழிக்க ஆரம்பித்துள்ளாராம் த்ரிஷா.

 

அஜீத், சிம்புவுடன் டூயட் பாடப் போகும் புது ஹீரோயின் பல்லவி ஷர்தா!!

சிம்பு மற்றும் அஜீத் படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா பட்டம் வென்ற பல்லவி ஷர்தா.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் கவுதம் மேனன்.

அஜீத், சிம்புவுடன் டூயட் பாடப் போகும் புது ஹீரோயின் பல்லவி ஷர்தா!!

இப்போது சிம்புவை வைத்து ஒரு படத்தையும் அந்தப் படம் முடிந்த கையோடு அஜீத்தை வைத்து ஒரு படமும் இயக்குகிறார்.

இந்தப் படங்களில் பாலிவுட் நடிகை பல்லவி ஷர்தாவை தனது இரண்டு படங்களிலும் நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கவிருக்கிறார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு பிறகு ஆஸ்திரேலியாவில் குடியேறிய தம்பதிகளுக்கு மகளாய் பிறந்தவர் பல்லவி ஷர்தா.

நடிப்பில் மட்டுமல்லாமல் பரத நாட்டியத்தையும் கற்றுக் கொண்ட பல்லவி ஷர்தா 2010-ல் ‘மிஸ் இந்தியா ஆஸ்திரேலிய'அழகியாக பட்டம் பெற்றவர். சமீபத்தில் வெளியான 'பேஷ்ராம்' திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்த பல்லவி ஷர்தாவின் நடிப்பைப் பார்த்து கௌதம் மேனன் அவரைத் தேர்ந்தெடுத்தாராம்.

பாலிவுட் நடிகையை தமிழில் அறிமுகப்படுத்துவதோடு, தனது அடுத்தடுத்த இரு படங்களுக்கும் 'சல்லிசாக' ஒப்பந்தம் செய்துவிட்ட கவுதம் மேனன் கில்லாடிதான் என்கிறது கோலிவுட்.

 

தல, தளபதி சேர்ந்து நடிச்சா நான் அந்த படத்தை தயாரிக்க ரெடி: ஜே. அன்பழகன் எம்.எல்.ஏ.

சென்னை: அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை தயாரிக்க தான் தயாராக இருப்பதாக அன்பு பிக்சர்ஸ் உரிமையாளரும், திமுக எம்.எல்.ஏ. வுமான ஜே. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து 1995ம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு ஒருவர் படத்தில் மற்றொருவரை கிண்டல் அடிப்பது, பஞ்ச் வசனம் பேசுவது என்று இருந்தனர்.

தல, தளபதி சேர்ந்து நடிச்சா நான் அந்த படத்தை தயாரிக்க ரெடி: ஜே. அன்பழகன் எம்.எல்.ஏ.

இந்நிலையில் அஜீத்தும், விஜய்யும் தற்போது நல்ல நண்பர்களாகிவிட்டனர். ஒரு காலத்தில் கோபத்தில் கொந்தளித்த அஜீத் தற்போது சாந்தமாகிவிட்டார். அஜீத்தின் குணத்தை விஜய் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை.

இந்நிலையில் அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை எனது அன்பு பிக்சர்ஸ் மூலம் தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அஜீத் மற்றும் விஜய் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு அவர்கள் நடித்தால் அந்த படத்தை தயாரிக்க நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய்யின் தலைவா பட ரிலீஸில் பிரச்சனை வந்தபோது அதை ரிலீஸ் செய்ய ஜே. அன்பழகன் முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை இருக்கும் ஆபாச சிடி?: பரபரக்கும் திரையுலகம்!

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை இருக்கும் ஆபாச சிடி?: பரபரக்கும் திரையுலகம்!

சென்னை: ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார்.

ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம்.

அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.

இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம்.

இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.

 

ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்!

ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெருமையைப் பெற்ற ஹிப் ஹாப் தமிழன் ஆதி, தனது இரண்டாவது இசை ஆல்பத்தை விரைவில் வெளியிடுகிறார்.

'க்ளப்புல மப்புல திரியிற பொம்பள என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல...' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் ஆதி.

ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்!

கோவையைச் சேர்ந்த இளைஞர். எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு, வெளிநாட்டு வேலைக்கெல்லாம் போகாமல், இசைத் துறையைத் தேர்வு செய்தவர்.

சினிமா தவிர்த்து, தனி இசை ஆல்பங்கள் பெரும்பாலும் தமிழில் பெரிய அளவில் எடுபடுவதில்லை. அந்தப் போக்கை கடந்த ஆண்டு உடைத்தார் ஆதி. இவரது ஹிப் ஹாப் தமிழா சர்வதேச அளவில் ஹிட்டானதுடன், இந்தியாவின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களில் அனிருத் இசையில் எதிர் நீச்சலடி, சென்னை சிட்டி கேங்ஸ்டா பாடல்களைப் பாடினார்.

ஹாலிவுட் படமான ஸ்மர்ப் 2-ல் இடம்பெற்ற நா நா நா பாடலுக்கு இவர்தான் இசையமைத்தார். இதன் மூலம் ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெருமை ஆதிக்கு கிடைத்தது.

ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்!

இப்போது ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப் அமைப்புடன் இணைந்து இரண்டாவது ஆல்பத்தை வெளியிடுகிறார் ஆதி. இந்த ஆல்பத்துக்கு சூட்டப்பட்டுள்ள தலைப்பு 'இன்டர்நேஷனல் தமிழன்'.

இந்த ஆல்பத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஆதி, 'இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. காரணம், நான் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளேன். எனக்கு எல்லாமே மீடியாதான். அந்த ஆதரவுதான் என்னை ஹாலிவுட் வரை அழைத்துப் போனது. இந்த இரண்டாவது ஆல்பத்தை ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப் மூலம் வெளியிடுவது பெருமையாக உள்ளது," என்றார்.

 

வீரம் படத்தின் சென்னை, என்எஸ்சி உரிமையைப் பெற்றார் ராம நாராயணன்!

சென்னை: அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் சென்னை விநியோக உரிமையைப் பெற்றுள்ளார் இயக்குநர் ராம நாராயணன்.

பொங்கலை முன்னிட்டு அஜீத்தின் ‘வீரம்', விஜய்யின் ‘ஜில்லா' ஆகிய படங்கள் மோதுகின்றன.

ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10-ம் தேதி ரிரீஸ் என்று சொல்லப்பட்டாலும் இன்னும் சந்தேக நிலை நிலவுகிறது.

வீரம் படத்தின் சென்னை, என்எஸ்சி உரிமையைப் பெற்றார் ராம நாராயணன்!

7 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத்தின் ஆழ்வார் படத்துடன் விஜய்யின் போக்கிரி மோதியது. அன்று ஆழ்வார் படுதோல்வியைச் சந்தித்தது. போக்கிரி வசூலில் வெளுத்து வாங்கியது.

இந்த முறையும் அஜீத்தின் வீரத்துடன் பலப்பரீட்சை செய்து பார்க்கவும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார் விஜய்.

இப்போதைக்கு இவ்விரு படங்கள் மட்டும் பொங்கலுக்கு உறுதியாகியுள்ளதால் அதன் வியாபாரங்கள் துவங்கிவிட்டன. இதில் கொஞ்சம் முன்பாகவே ‘ஜில்லா' படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டது. தியேட்டர் புக்கிங்கும் படுவேகமாக நடந்து வருகிறது.

வீரம் படத்தின் சென்னை, என்எஸ்சி உரிமையைப் பெற்றார் ராம நாராயணன்!

தற்போது அஜீத் படத்தின் விநியோக உரிமை விற்பனை சூடு பிடித்துள்ளது. 'வீரம்' படத்தின் சென்னை, என்.ஏ.சி.ஏரியாவின் விநியோக உரிமையை இயக்குனர் இராம நாராயணனின் ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, என்எஸ்சிதான் (வட, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு) பெரிய ஏரியாக்கள். அதிக தியேட்டர்கள் உள்ள ஏரியாக்கள் இவை.

மற்ற ஏரியாக்களுக்கான வீரம் பட வியாபாரம் நடந்து வருகிறது.

 

அனுமதியில்லாம ட்வீட் பண்ணே அவ்ளோதான் - சமந்தாவை எச்சரித்த நாகார்ஜூன்

ஹைதராபாத்: அனுமதியில்லாமல் தனது கேரக்டர் பற்றி ட்விட்டரில் தகவல் வெளியிட்ட சமந்தாவை கடுமையாக எச்சரித்துள்ளார் நாகார்ஜுனா.

முன்பெல்லாம் ஒரு படத்தின் அல்லது அதில் நடிப்பவர்களின் விவரங்களை அந்தப் படத்தின் பிஆர்ஓதான் சொல்வார்.

இப்போது அந்த விவரங்கள் எல்லாமே தெரிய வேண்டுமானால் ட்விட்டர் அல்லது பேஸ்புக் போனால் போதும்.

அனுமதியில்லாம ட்வீட் பண்ணே அவ்ளோதான் - சமந்தாவை எச்சரித்த நாகார்ஜூன்

நடிகர், நடிகைகள், இயக்குநர்கல் தங்களின் படங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் நடிகை சமந்தா ட்விட்டர் - பேஸ்புக்கை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்.

தன்னைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது ட்விட்டரில் பதிவு செய்கிறார். சித்தார்த்தை இவர் காதலிப்பதும் ட்விட்டர் வாயிலாகத்தான் தெரியவந்தது.

தற்போது தெலுங்கில் அவர் நடிக்க உள்ள ‘மனம்' படத்தில் தனது கேரக்டர் என்ன என்பதையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனால் இப்படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடிக்கும் நாகார்ஜுனா அதிர்ச்சியானார். படத்தின் ரகசியம் வெளியாகி விட்டதே என கொதித்துப் போனாராம்.

அனுமதியில்லாம ட்வீட் பண்ணே அவ்ளோதான் - சமந்தாவை எச்சரித்த நாகார்ஜூன்

சமந்தாவை தொடர்பு கொண்டு கேரக்டர் பற்றிய விவரத்தை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு கண்டித்தாராம். படப்பிடிப்பு முடியும்வரை தனது அனுமதியில்லாமல் படம் சம்பந்தமான எந்த விஷயத்தையும் ட்விட்டரில் வெளியிடக் கூடாது என்று தடை போட்டுள்ளார்.

நாகார்ஜூனாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதால் ட்விட்டரில் கருத்துக்கள் பதிவு செய்வதை சமந்தா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

 

மீடியாவின் வளர்ச்சி... வைரமுத்துவுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?

மீடியாவின் வளர்ச்சி... வைரமுத்துவுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?

எந்த சினிமா நிகழ்ச்சிக்கு வந்தாலும் 'பாசத்துக்குரிய பத்திரிகை நண்பர்களே' என வைரமுத்து விளிப்பதை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.

அவர் பாசம் ரொம்ப மோசம் என்பதே உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் நேற்று முன்தினம் அமைந்தது அவர் பேச்சு.

அது ஒரு சுமாரான, வருமா வராதா என்ற சந்தேகத்துக்குரிய படத்தின் இசை வெளியீட்டு விழா.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, அந்த புது இயக்குநருக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார் தனது நீண்ட பேச்சில்.

திடீரென ஒரு பிரேக் விட்டவர், அடுத்து மீடியா பக்கம் தன் பேச்சைத் திருப்பினார். குறிப்பாக இணையதளங்கள்.

"இப்போது ஊடகங்களின் வேகம் பிரமிக்க வைக்கிறது. நான் மாட்டு வண்டியில் ஏறிப் போய் மாட்டுக்கார வேலன் படம் பார்த்தேன்.

எங்கள் ஊரில் வயலுக்கு போய்விட்டு வந்து குளித்துவிட்டு மட்டமான பவுடர் ஒன்றை முகத்தில் அடித்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு போவார்கள்.

இப்போது எல்லாமே போய்விட்டது. படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக புள்ளிவிபரம் சொல்கிறது. ஒரு பெரிய ஹீரோ நடித்த படத்தை முதலில் ஒரு லட்சம் பேர் பார்த்தால், அதே ஹீரோ நடித்து வெளிவரும் அடுத்த படத்தை பார்க்க வரும் எண்ணிக்கை 80 ஆயிரமாக குறைகிறது. இதற்கு காரணம் ஊடகங்கள்தான்.

இப்போது செல்போனிலேயே படம் பார்த்துவிட முடிகிறது. இணையதளங்கள் பெருகிவிட்டன. இவற்றையெல்லாம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் சினிமா அழிந்துவிடும். தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு ஏதாவது முடிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது," என்றார் வைரமுத்து.

நியாயமாக தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது வைரமுத்து மீதுதான்.

தான் வேலை பார்த்த, பாடல்கள் எழுதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப வர ரூ 1 லட்சம் பணத்தை கறாராகக் கேட்டுப் பெற்றுள்ள வைரமுத்து, இதுபோன்ற தனது அசிங்கங்கள் அம்பலத்துக்கு வருவது பொறுக்காமல் ஊடகங்களைத் தட்டி வைக்கச் சொல்கிறாரா?

தயாரிப்பாளர் சங்கம் நியாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் மீது? தான் வேலை பார்த்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கையூட்டு கேட்கும் வைரமுத்து மீதா? அதை அம்பலப்படுத்தும் மீடியா மீதா? என கேள்வி எழுப்பியுள்ளனர் மீடியாக்காரர்கள்.

 

கோடிக் கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்றாரா நடிகர் சூர்யா?

கோடிக் கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்றாரா நடிகர் சூர்யா?

சென்னை: நடிகர் சூர்யா கோடிக் கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்கித் தருமாறு ஒரு கும்பலை அணுகியதாக தெலுங்கு செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் செயல்படும் பிரபல செய்தி சேனல் ஏபிஎன் நியூஸ். அந்த சேனல் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் கும்பல் பற்றி ஒரு விசாரணை நடத்தியது. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவின் மகன் தாரக ராமா ராவ், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த கும்பலை அணுகி தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தர கேட்டது தெரிய வந்துள்ளது என்று ஏபிஎன் தெரிவித்துள்ளது.

சூர்யா அந்த கும்பலை அணுகி ரூ.10 முதல் ரூ.100 கோடி வரையிலான கருப்பு பணத்தை மாற்றித் தருமாறு கேட்டதாக அந்த சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அந்த கும்பலுக்கு பெரிய தொகையை வழங்கவும் சூர்யா ஒப்புக் கொண்டதாக ஏபிஎன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த அந்த சேனல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, இதெல்லாம் படு அபத்தமான தகவல்கள்.. சூர்யா அப்படிப்பட்டவருமல்ல. அரசுக்கு சரியாக வரி செலுத்தி வரும் இளம் நடிகர்களுள் முதன்மையானவர் என சூர்யா தரப்பில் தெரிவித்தனர்.

சூர்யா மீது ஏன் இவர்களுக்கு இவ்வளவு கடுப்பு!

 

தமிழகத்தில் 900 அரங்குகளில் கோச்சடையான்... ஆனால்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - தீபிகா படுகோன் நடித்த கோச்சடையான் படத்தை கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட தயாராக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வேறு எந்தப் படமும் வெளியாகாத ஒரு தேதியில் கோச்சடையானை வெளியிடுமாறு தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 900 அரங்குகளில் கோச்சடையான்... ஆனால்?

இதனால் கோச்சடையான பொங்கலுக்கு வருவதில் சந்தேகம் நிலவ ஆரம்பித்துள்ளது.

இந்திய நாட்டில் முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள படம் கோச்சடையான். இதில் வரும் பாத்திரங்கள் நிஜ உருவத்துக்கு இணையான மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பாதி காட்சிகளில் நிஜ பாத்திரங்களும் தோன்றுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக ஜனவரி 10ல் வெளியாகும் என கூறப்பட்டது. அதே நாளில் நடிகர் அஜீத் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரது படங்களும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 3 படங்களின் போட்டியும் அமோகமாக இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் மிக தித்திப்பானதாகவும் இருக்கும். எனினும், தமிழகத்தில் 3 பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட போதுமான தியேட்டர்கள் இல்லாத நிலை உள்ளது. தியேட்டர் அதிபர்கள் மற்ற கதாநாயகர்களின் படங்களை விட நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், 750 திரையரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் ஜில்லா மற்றும் அஜீத் நடிப்பில் வீரம் ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரும் என்றும் இதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

எனவே கோச்சடையான் பட தயாரிப்பாளர்களிடம் 3 படங்களும் ஒரே நாளில் வெளியானால் அது வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்த திரைப்பட வர்த்தகர்கள், வேறு படங்கள் வெளிவராத நாளில் கோச்சடையான் வெளியானால் 900 அரங்குகள் வெளியிடலாம் என யோசனை தெரிவித்துள்ளனர். இந்த யோசனையைப் பரிசீலித்து முடிவு சொல்வதாக கோச்சடையான் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், வருகிற டிசம்பர் 12ந் தேதி இசை வெளியீடு நிச்சயம் என்றும், அன்றைய தினம் ரிலீஸ் தேதியும் உறுதியாக அறிவிக்கப்படும் என்றும் கோச்சடையான் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

சிம்பு, நயன் ஜோடி சேர்வதால் பாண்டிராஜ் படத்திற்கு கூடிய மவுசு

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளது அந்த படத்தின் மவுசை தற்போதே கூட்டியுள்ளது.

சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து வல்லவன் படத்தில் நடித்தார்கள். அந்த படத்தை பற்றிய பேச்சு வந்ததை விட நயன், சிம்பு காதல் விவகாரம் பற்றி அதிகம் பேசப்பட்டது.

சிம்பு, நயன் ஜோடி சேர்வதால் பாண்டிராஜ் படத்திற்கு கூடிய மவுசு

காதல் ஜோடியாக அவர்கள் இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிம்புவும், நயனும் பிரிந்துவிட்டனர்.

காதல் முறிவுக்கு பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவே இல்லை. இந்நிலையில் தான் பாண்டிராஜ் தான் சிம்புவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு நயன்தாரா தான் சரியான ஹீரோயின் என்று முடிவு செய்தார். அவரை அணுகி படத்தில் நடிக்கவும் சம்மதிக்க வைத்தார். ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக இருந்த நயனும், சிம்புவும் மீண்டும் ஜோடி சேர்வது படத்தின் மவுசை தற்போதே கூட்டியுள்ளது.

படத்தின் சேட்டிலைட் உரிமம் மற்றும் வினியோக உரிமை குறித்து இப்போதே பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

 

சிவாஜி சிலை அகற்றம்... ஆழ்ந்த மவுனத்தில் அன்னை இல்லம்!

சென்னை: சிவாஜி சிலையை அகற்றலாம் என தமிழக அரசு முடிவாகச் சொல்லிவிட்ட நிலையில், அதுகுறித்து சினிமாக்காரர்கள் எந்த கருத்தையும் சொல்ல முன்வரவில்லை.

இதைவிட கவனிக்கத்தக்க விஷயம்... சிவாஜியின் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் வாயே திறக்காமலிருப்பதுதான்.

இந்த சிலையை அகற்றக் கோரி கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே வழக்கு தொடரப்பட்டுவிட்டது. ஆனால் அப்போது தமிழக அரசு இந்த சிலையால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளிப் போட்டு வந்தது.

சிவாஜி சிலை அகற்றம்... ஆழ்ந்த மவுனத்தில் அன்னை இல்லம்!

ஜெயலலிதா முதல்வரான பிறகும்கூட இந்த சிலை விவகாரம் உடனே கிளம்பவில்லை. 'இது முதல்வரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பல்ல, நீதிமன்றத்தில் வழக்கு வந்திருக்கிறது... அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து தமிழக அரசு பதிலளித்திருக்கிறது' என்று சொல்லும் அளவுக்கு கவனமாக இந்த விவகாரம் கையாளப்பட்டுள்ளது.

சிலையை எடுக்கக் கூடாது என எதிர்த்தால், அது மக்கள் விரோத கருத்தாக முன்நிறுத்தப்படும் என்பது அன்னை இல்லத்துக்கு தெளிவாகப் புரிந்திருக்கிறது.

இதுகுறித்து சிவாஜி அபிமானிகள் பலர் பிரபு மற்றும் ராம்குமாரைச் சந்தித்து, நாம ஏதாவது போராட்டம் நடத்தலாமா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்தவர்கள், பேசாம போங்கப்பா... போராட்டம் அது இதுன்னு நீங்க பண்ணிட்டுப் போயிடுவீங்க. பல வகையிலும் பாதிப்பு எங்களுக்குதான். அதான் வேற இடத்தில வைக்கலாம்னு சொல்லிடுச்சே அரசு... இத்தோட விடுங்க, என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்களாம்!!