நவம்பரில் வெளியாகும் என்று கூறப்பட்ட அஜீத்தின் புதிய படம், பொங்கலுக்கு தள்ளிப் போயிருக்கிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.
இந்தப் படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.
ஆனால் அதில் இப்போது மாற்றம். மேலும் கொஞ்சம் அவகாசமெடுத்து, மிக நேர்த்தியாக இந்தப் படத்தைத் தரலாம் என்பதாலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இசையமைக்கவிருப்பதாலும், இரண்டு மாதங்கள் தள்ளிப் போட்டுள்ளனர்.
படத்தை பொங்கலுக்கு வெளியிட்டால் நல்ல வசூலை அள்ளலாம் (வீரம் அனுபவம்!) என்பதால், ஜனவரி 15-அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கின்றனர். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார்.
Post a Comment